Tuesday, April 28, 2009

இயக்குநரின் உளி

சென்ற வருடம்
என் முதல் படம் வெளியானது
முதல் படமே வெற்றியடைந்ததை
இன்றும்
ஒன்றிரண்டு பத்திரிகைகள்
பேசிக்கொண்டிருக்கிறது
ஒளிப்பதிவு அருமை
கதாநாயகன் அறிமுகத்திலேயே அசத்தியிருக்கிறார்
வித்தியாசமான முயற்சி
இப்படி பல பல பாராட்டுக்கள்
இந்த பண்டிகை நாளில்
ஏதோ ஒரு தனியார் தொலைக்காட்சி
அதை ஒளிபரப்புகிறார்கள்
நானும் பார்க்கிறேன்
கதாநாயகன் பாறையில் எதையோ
வரைந்து கொண்டிருக்கிறான்
முகத்தில் சோகம் அப்பியிருக்கிறது
மிகவும் மோசமான உடல் நிலையில்
அம்மா தவிக்கிறாள்
வைத்தியம் பார்க்க இயலாத பண முடை
பக்கத்து வீட்டு பெண்ணை
பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு
அம்மன் சிலை செய்ய
ஏதோ ஒரு ஊருக்கு பயணமாகிறான்
கோவில் வேலை மும்முரமாய் நடக்கிறது
இவன் அம்மன் சிலை வேலையில்
தன்னை ஆழ்த்திக்கொள்கிறான்
அம்மனின் கண்கள்
அம்மாவின் கண்களை ஒத்திருக்கிறது
பார்த்து பார்த்து செதுக்குகிறான்
கோவில் வேலை முடிந்து
கும்பாபிஷேகம் நடக்கிறது
இவன் ஊர் திரும்பிகிறான்
பேசாத சிலையாய்
அம்மா இறக்கிறாள்
படம் முடிந்திருந்தது
நான் அழுகிறேன்

4 comments:

யாத்ரா said...

இந்தக் கவிதையோட உணர்வு எனக்கு மிகவும் நெருக்கமாயிருக்கிறது,

//அம்மனின் கண்கள்
அம்மாவின் கண்களை ஒத்திருக்கிறது
பார்த்து பார்த்து செதுக்குகிறான்//

இயக்குனரின் உளி, அருமையா இருக்கு

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர் என்ற நிலையிலிருந்து இயக்குனர் என்ற நிலைக்கு வருவதற்குள் எவ்வளவு அவலங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எனக்கு கூடுதலாகவே தெரியும்.

ஒரு வகையில் அந்த அம்மன் சிலை செய்கிறவனோட நிலை தான், அறிமுக உதவி இயக்குனனோட நிலையும்,,,,,,

Sugirtha said...

பகிர்தலுக்கு நன்றி யாத்ரா.தன்னை நிரூபிப்பதற்கான போராட்டத்தில் முனைந்திருக்கையில் எதிர்கொள்ளும் அவலங்கள், நிரகாரிப்பு எல்லாமே கொடுமையான ரணங்கள் தான்.

மண்குதிரை said...

யாத்ரா சொல்வதுபோல் நானும் அறிவேன். இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. நன்றி சுகிர்தா!

Sugirtha said...

இந்த பகிர்தல் மனதுக்கு இதமாய் இருக்கிறது. நன்றிஙக நண்பரே. உங்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது?