Saturday, April 4, 2009

என் செல்லமே

என்ன நிந்தனை இது
உன்னை இடை கிடத்தி
உறங்கிடத்தான் ஆசை எனக்கும்
உன் பிஞ்சு விரல்களை
முத்தமிட்ட படியே தூங்கிடவும்
நீ தூங்கிடும் அழகை ரசிக்கவும்
எத்தனையோ ஆசை தான் எனக்கும்
நீ செய்யும் செல்ல
குறும்புகள் அனைத்தையும்
நீ வளர்ந்தபின்
உன்னிடம் சொல்லிட
கதைகள் இருக்குமா என்னிடம்

No comments: