Wednesday, April 22, 2009

மிச்சம்

ஒவ்வொன்றாக
கடந்த கால பக்கங்களை
புரட்டிப் பார்க்கையில்
அடிக்கோடிட்டிருக்கும் பக்கங்களில்
உன்னோடிருந்த எல்லாமே பதிவாகி இருக்கிறது
மெல்ல வருடி பார்க்கிறேன்
மேடிட்டிருந்த காயங்களில்
இன்னும் வலி மிஞ்சி நிற்கிறது

10 comments:

யாத்ரா said...

நல்லா இருக்குங்க கவிதை,

காயங்களில் மட்டுமல்ல, எவ்வளவு காலமானாலும் காயங்களின் தழும்புகளில் கூட வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது.

TKB காந்தி said...

அழகா இருக்கு :)

மண்குதிரை said...

நல்ல இருக்கு சுகிர்தா.

ஏதாவது இதழ்களுக்கு அனுப்புங்கள் சுகிர்தா.

நிறைய கவனம் பெற உதவும் அல்லவா.

Sugirtha said...

நன்றிங்க யாத்ரா.

Sugirtha said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றிங்க காந்தி.

Sugirtha said...

@ மண்குதிரை

நன்றி நண்பரே! இதழ்களுக்கு அனுப்பும் அளவுக்கு நான் எழுதுகிறேனா தெரியவில்லை? ஆலோசனைக்கு என் மனமார்ந்த நன்றி.

Maddy said...

இதயம் கணக்கும் வரிகள்

Sugirtha said...

@ Maddy

உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் என் நன்றிகள். உங்கள் எல்லா comments க்கும் என் நன்றிகள்.

இராவணன் said...

ஆழமா இருக்குங்க கவிதை.

Sugirtha said...

ராவணனின் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.