Tuesday, March 24, 2009

பெயர் அறியா பரீட்சய முகம்

எப்போதும் உன் முகத்தில் தவழும்
அந்த மென் அமைதி
அவள் வருகைக்கான
உன் காத்திருப்பு
வார்த்தைகளை கடந்து
உங்களுக்கிடையில்
பற்றிகொண்ட இந்த நேசம்

பிடித்திருக்கிறது
அவளுக்கு

ஏதோ ஒன்று
உன்னை திரும்பி திரும்பி
பார்க்க தூண்டுகிறதென்று
என்னிடத்தில் துடித்து புலம்புகிறாள்
நீ அறியாமல்
உன்னை ரசிக்கும் ஒரு ஷணத்தில்
உன் பார்வைச் சாரல்
சில்லென தீண்டும் பொழுதுகளில்
பொங்கிப் பரவசிக்கிறாள்

இதெல்லாம் உன்னிடத்தில்
சொல்லிட சொல்கிறேன்
சொல்லாத இந்த இம்சை
பிடிதிருக்கிறதென
மறைகிறாள்
முற்றி கனக்கும் இந்நேசம்
சுமப்பவர்க்கே பெருந்தண்டனையென
புரியவைப்பதெப்படி அவளுக்கு

No comments: