Friday, June 12, 2009

காதலுடல்

திரண்டு நிற்கும் வயது
தொடுகையில் கனிகிறது
சுருண்டு விரிந்து
திமிறித் துடிக்கிறது
உச்சி முடி பற்றி இழுத்து
உதடுகளில் சொல்கிறது
தேவையை
ஊர்கிற விரல்களில்
வெடிக்கிறது வெட்கம்
புரண்டு நழுவி
சேர்ந்து விலகி
உருகி கரைந்து
எல்லாம் தீர்ந்ததும்
மறுபடி துவங்க
மனது கேக்க
களைத்து புன்னகைக்கிறதுடல்

11 comments:

நந்தாகுமாரன் said...

இயல்பான அருமையான கவிதை

யாத்ரா said...

O, what an expression, really superb, the words u select to flower this poem is awsome.

sorry there is no tamil font here.

இராவணன் said...

ரொம்ப உண்மையா இருக்குங்க.
அழகாக.

அகநாழிகை said...

சுகிர்தா,
அருமையான வெளிப்பாடு. இந்தக் கவிதையில் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் இது வாசிப்பு சுவாரசியம் உள்ள கவிதைதான் இது என்றாலும், பரவலாக எழுதக்கூடி கரு. ஏற்கனவே எழுதப்பட்ட என்னுடைய கவிதை கூட இது போல ஒன்று இருக்கிறது. மற்றபடி கவிதையின் வரிகள் இயல்பாக உள்ளது. ‘வயது‘ என்ற வார்த்தை மட்டும் இல்லாமலிருந்திருக்கலாம்.

‘வெக்கம்‘ என்ன சொல்லை ‘வெட்கம்‘ என்றே போடலாமே.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நல்லா இருக்குங்க..

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நல்லா இருக்குங்க..

Sugirtha said...

நன்றி நந்தா.
நன்றிங்க யாத்ரா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ராவணன்.
வெட்கம் மாற்றிவிட்டேன். உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க வாசுதேவன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கோகுலகிருஷ்ணன்.

மாதவராஜ் said...

சரளமாய் வருகிறது வரிகள்.
உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்கணும்.

Sugirtha said...

மாதவராஜ் - உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Joe said...

அருமையான கவிதை.

//
எல்லாம் தீர்ந்ததும்
மறுபடி துவங்க
மனது கேக்க
களைத்து புன்னகைக்கிறதுடல்
//

அட்டகாசமான வரிகள்.

Sugirtha said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி Joe