நீ இந்த வார இறுதியில்
காலி பண்ணவிருப்பதை
அப்பா அம்மாவிடம் சொன்னார்கள்
சிறு தவிப்பு மனதில்
அதை மறைத்து
புத்தகம் படிப்பதாய்
பாவனை செய்தேன்
தனித்திருந்த எனக்கு
உன் வருகை வசந்தமாய்
இந்த ஒரு வருடம்
எனக்குள் எத்தனை எத்தனை மாற்றம்
உன் மௌனமே என்னை
உன்னிடத்தில் பற்றி இழுத்தது
உன் குரல் எப்படி இருக்கும்
கேட்க ஆசை இருந்தது
பழகிய நாய்க்குட்டியாய்
உன் வண்டியின் ஓசையை
பழகிக்கொண்டது என் காதுகள்
எதிரெதிர் பார்க்கும் தருணங்களில்
ஒரு முறை நிமிர்வாய்
உன் கண்களை பார்க்கவே
நான் காத்துக்கிடப்பேன்
உன்னை பார்க்க முடிகிற
அந்த நிமிடங்களே
என் வாழ்கையை சுவாரஸ்யமாக்கியது
சொல்லவா வேண்டாமா
மருகித் தவித்திருந்து
பொழுதுகள் கழிந்தது
இன்று நான் எழுந்ததும்
நீ சென்றுவிட்ட செய்தி
செவி எட்டியது
உன் அறையை சுத்தம் செய்ய
அம்மா என்னை மாடிக்கு அனுப்பினாள்
திறந்ததும் எனக்குள் வெறுமை
அறையெங்கும் உன் வாசனை
நீ விட்டு சென்றிருந்த
பல் முறிந்து கிடந்த
ஒரு பாக்கெட் சீப்பு
எடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன்
ஜன்னலோரம் கிடந்த
ஒற்றை காலுறை
உனக்கு வந்திருந்த
ஏதோ வங்கி கடிதத்தின் மேலுறை
கீழே கிடந்த
ஒரு பழைய பேனா எடுத்து
உன் பெயருக்கு முன்
என் பெயரை எழுதினேன்
பின் அவசரமாய் கிழித்து
குப்பைக்குள் பதுக்கிவிட்டேன்
ஒரு ஓரத்தில்
காகிதங்கள் குவிந்து கிடந்தது
ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்கையில்
உள்ளேயிருந்து புன்னகைத்தது
காணாமல் போயிருந்த என் புகைப்படம்
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
I have heard of Navadarshanam (Nd) through my friend Suma few years back. She mentioned to me that she had been to that place once for a gat...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
6 comments:
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம், எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்,,,,,,,
இந்தப் பாட்டை மனதில் ஓடவிட்டுக் கொண்டே தான் இந்தக் கவிதையை படித்தேன்,
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, அந்த தொலைந்து போன புகைப்படம் கிடைக்கிற அப்போ இருக்கும் உணர்வு இந்தக் கவிதையை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது, நல்ல கவிதை.
நன்றிங்க யாத்ரா :-)
காணாமல் போயிருந்த என் புகைப்படம்!!
கிடைத்தது
புகைப்படம் மட்டுமல்ல,
முடியாது தொடரபோகும்
முடிந்து வைத்த
முன்ஜென்ம பந்தமும் தான்!!
Maddy - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
/காணாமல் போயிருந்த என் புகைப்படம்/
இந்த கவிதைய என்னால ரொம்ப எதிர்மறையாகத்தான் அணுக முடியுது...உதாசீனபடுத்தபட்டதா தோணுது :)
நல்லா இருக்குங்க!
Post a Comment