அந்த புதிய கட்டிடம்
அழைத்துச் செல்லும் தெரு
வழியெல்லாம்
இறைந்து கிடக்கும் மணலில்
சின்னஞ்சிறு பாதங்கள்
சிவப்பு ரிப்பன் கட்டிய சிறுமி
அவள் மேலே
தாவி ஏறும் நாய்க்குட்டி
விளையாட்டு முடிவில்
நாய் வாலில் ஆடும் ரிப்பன்
என் கண்களில் வழியும் நீர்
அழண்டா சரியாயிரும் என
கண் துடைத்து தேற்றுகையில்
தாய் அவள் குழந்தை நான்
சிக்னலில் நிற்கும் வாகனங்கள்
என்னை எட்டிப் பார்க்கும் குழந்தை
மெல்ல கன்னம் கிள்ளையில்
அந்த ஜொள்ளில் வழியும் கவிதை
மாலை நேரப் பூங்கா
சாட் பூட் த்ரீ என
அந்த சந்தோசக் கூச்சலில்
மீள்கிறதென் பால்யம்
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
10 comments:
:)
வெள்ளிக்கிழமை காலங்காற்தால இப்படி ஒரு கவிதை படித்தால் போதும் நாள் முழுக்க உற்சாகம் தான்.
நன்றி லாவண்யா,நன்றி யாத்ரா! :)
:-) அருமை. ( 'ஜொள்ளில்' - 'எச்சிலில்' என்று போட்டிருக்கலாம்னு தோணிச்சு...)
@ ஒளி - அப்படியா! நன்றி :)
ரொம்ப நல்லா இருக்குங்க...
இனிது இனிது கவிதை இனிது.
நன்றிங்க கமலேஷ்!
நன்றிங்க சந்தான கிருஷ்ணன்!
soooooooooo sweeeeeeeeeeet
நன்றி கௌரி... :))
Post a Comment