திருத்தி எழுதப்பட்ட
இப்புத்தகத்தில்
ஆதாமல்ல இந்த ஏவாளே
முதல் மனுஷி
தனியே இருந்த அவளை
சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை
துவாரம்தோரும் துளிர்த்து
கிளைத்தூர்ந்து துரத்த
ஏதேன் தோட்டத்தின்
வசந்தங்களை கொய்து
குழைத்து தீட்டிய ஓவியத்தில்
முளைத்த ஆதாம்
இப்போது ஏவாளில்
பருவங்களை விதைக்கிறான்
11 comments:
Nalla Padaippu Sugi. Nice words.
Nalla Padaippu Sugi!!!
"ஆதாமல்ல இந்த ஏவாளே
முதல் மனுஷி"
Nice pa
நன்றி சுமதி! முதல் வருகையும், கமெண்டும் சந்தோசமா இருக்கு :-)
என் அன்பு சுகிர்தா...
”சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை”
இப்படி ஒரு தனிமையை எப்படி சொல்லமுடிந்தது..excellent..
பின் வரும் வரிகளும் அருமை..
எல்லாப்பருவங்களையும் விதைக்கத்தான் வேனும்
தீராத்தனிமையை தொலைக்க
ஒரு வேண்டுகோள்..
எழுது சுகி...இன்னும்...
அன்பு ஸ்ரீ,
உன்னோட கமெண்ட் ரொம்ப சந்தோசமா இருக்கு.
எழுதறேன் பா :-)
சுகி ரொம்ப நாளை பிறகு வாசிக்கிறேன். கவிதை மொழியில் நல்ல மாற்றம். வாழ்த்துகள்
”சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை”
அருமை..
நன்றி லாவண்யா! ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து எப்படி இருக்கீங்க?
நன்றி கௌரி...
பேக் வித் பேங்...
அட்டகாசம் சு. இன்னும் எழுதுங்க..
Murali - Thank you!
ம்ம் எழுதலாம்... :)
Post a Comment