Friday, March 4, 2011

திரையோவியம்

திரைச்சீலையின் முடிவில்
கிடந்த சிலையின் மேல்
சிறகு விரித்த பறவையொன்று
இளைப்பாற இறங்க
கோச்சை சேவலின்
வீரியம் கொண்டெழுந்தது சிலை
திடீர் உயிர்தலில் திடுக்கிட்டுப் பறக்கும்
பறவையின் கால்களைப்பற்றி
தன்மேல் கிடத்திய சிலை
அலகுமுட்டி, இறகுவருடி சொல்கிறது
இதுவரையும் கேட்டிறாத கதைகளை பறவைக்கு
சொல்லியும் கேட்டும் களித்த வேளையில்
நடு சாமக் கனவின் சாபம் தொற்ற
சிலைக்கு முளைத்தன இருபெரும் சிறகுகள்
பறவைக்கு வாய்த்தது பேரழகுச் சிலையுரு
உருமாறிய அதிர்வில் குழைந்த சீலையில்
கலங்கிப் போயின பின்னான காட்சிகள்

5 comments:

santhanakrishnan said...

திரையோவியம்
வெவ்வேறு
மனநிலைக்கு இட்டுச்
செல்கிறது.

Sugirtha said...

நன்றிங்க சந்தானகிருஷ்ணன்...

உயிரோடை said...

யப்பா பயங்கர நவீன கவிதையா இருக்கு.

Sugirtha said...

நன்றி லாவண்யா :)

Unknown said...

The way of create the picture in the mind is awesome! Sugirtha U'v painted such a fantastic painting...