திரைச்சீலையின் முடிவில்
கிடந்த சிலையின் மேல்
சிறகு விரித்த பறவையொன்று
இளைப்பாற இறங்க
கோச்சை சேவலின்
வீரியம் கொண்டெழுந்தது சிலை
திடீர் உயிர்தலில் திடுக்கிட்டுப் பறக்கும்
பறவையின் கால்களைப்பற்றி
தன்மேல் கிடத்திய சிலை
அலகுமுட்டி, இறகுவருடி சொல்கிறது
இதுவரையும் கேட்டிறாத கதைகளை பறவைக்கு
சொல்லியும் கேட்டும் களித்த வேளையில்
நடு சாமக் கனவின் சாபம் தொற்ற
சிலைக்கு முளைத்தன இருபெரும் சிறகுகள்
பறவைக்கு வாய்த்தது பேரழகுச் சிலையுரு
உருமாறிய அதிர்வில் குழைந்த சீலையில்
கலங்கிப் போயின பின்னான காட்சிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
I have heard of Navadarshanam (Nd) through my friend Suma few years back. She mentioned to me that she had been to that place once for a gat...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
5 comments:
திரையோவியம்
வெவ்வேறு
மனநிலைக்கு இட்டுச்
செல்கிறது.
நன்றிங்க சந்தானகிருஷ்ணன்...
யப்பா பயங்கர நவீன கவிதையா இருக்கு.
நன்றி லாவண்யா :)
The way of create the picture in the mind is awesome! Sugirtha U'v painted such a fantastic painting...
Post a Comment