அந்தப் பேருந்தில்
நீண்ட இரவு பிரயாணத்
துவக்கத்திலேயே பார்த்தேன்
கடைசி சீட்டுக்கு
முந்தைய சீட்டில்
எங்கேயோ பார்த்த முகம்
எங்கு பார்த்திருப்பேன்
பள்ளியிலா கல்லூரியிலா
அல்லாது உறவினர்கள் வீடுகளில்
ஏதோ ஒன்றிலோ
யோசித்தபடியே அமர்ந்திருந்தேன்
ஞாபகம் வந்தபாடில்லை
களைப்பில் உறங்கியும் விட்டேன்
பாதி தூரம் கடந்த பேருந்து
இளைப்பாற நின்றிட
கண்களை கசக்கியபடி
நிமிர்ந்து அமர்ந்தேன்
என்னை கடந்து இறங்கிப் போனாள்
மறுபடியும் அதே முகம்
எப்படியும் பிடித்துவிட
நினைவுகளை கசக்கிப் பிழிந்தேன்
பயணிகளுக்கென முளைத்திருந்த
பிரத்யேக டீக்கடை முன்
தேநீர் அருந்தபடியே
ஏதோ நினைவில் ஆழ்ந்தவள்
சடாரெனத் திரும்பிப் பார்த்தாள் என்னை
கண்டு கொண்டதன் அடையாளமாய்
புன்னகைத்து அழைத்தாள்
புரிந்தது அவளை
நெருங்கியதும்
நலமா கேட்டாள்
மேலும் கீழுமாய் அசைத்தேன் தலையை
Monday, August 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
5 comments:
நானும் இதைப் படித்து முடித்த பிறகு புன்னகைத்துக்கொண்டே தலையை மேலும் கீழுமாய் அசைத்துக்கொண்டேன் :)
@ யாத்ரா - அப்டியா? :)
நன்றிங்க Sweatha!
ராமசந்திரானா என்றேன் ராமசந்திரன் என்றார் எந்த ராமசந்திரன் என்று கேட்கவில்லை :)
வரிகளில் கவிதையை முழுதாக பேசாமல் வாசிப்பவனின் கற்பனைக்கு விட்டது ரொம்ப அழகா இருக்குங்க.
நன்றி லாவண்யா!! :)
நன்றிங்க கமலேஷ்!!
Post a Comment