மாலை நேர மொட்டை மாடி
தனிமையில் நான்
தூரத்தில் தெரியும் பச்சை மலை
மலை குத்தி நிற்கும் மேகம்
பிசிற் பிசிறாய் தன்னை விடுவித்து
மறுபடியும் ஒன்றோடொன்று கலந்து
மௌனமாய் மிதக்கிறது
பார்வையை பிரித்து
கீழே பார்க்கையில்
தூரத்தில் ஒரு குடிசை
வாசலில் கால் நீட்டி
அமர்ந்திருக்கும் வயதான மூதாட்டி
குடிசையை ஒட்டிய
மலை அடிவாரத்தில் மேயும் ஆடுகள்
விளையாடி முடித்து வீடு திரும்பும்
குழந்தைகளின் ஆரவாரம்
இப்படி பதிவு செய்திருந்த
மனதை நெருங்கிய காட்சிகள்
அத்தனையும் நினைத்து பார்க்கையில்
இன்றும் நெகிழ்கிறது மனது
இப்போது குடியிருக்கும்
அடுக்கு மாடி கட்டிடத்தில்
அதே மாலை நேரம்
வெளியே பூட்டியிருந்த எதிர் வீட்டில்
பால்கனி கம்பிகளை பிடித்தபடி
ஒரு சின்ன தேவதை
8 comments:
நல்லா இருக்குங்க சுகிர்தா.
கவிதை ரொம்ப நல்லா இருக்கு சுகிர்தா.
//இப்போது குடியிருக்கும்
அடுக்கு மாடி கட்டிடத்தில்
அதே மாலை நேரம்
வெளியே பூட்டியிருந்த எதிர் வீட்டில்
பால்கனி கம்பிகளை பிடித்தபடி
ஒரு சின்ன தேவதை//
சிறைக்காலம் :(
irantu katsikalai nalla pathivu panniyirukkireengka sukirthaa
thodarnthu ezhuthungka
நன்றிங்க ராஜாராம்!
நன்றி யாத்ரா!
நன்றிங்க மண்குதிரை!
சுகிர்தா
கவிதை
நல்லா இருக்குங்க
நன்றிங்க நேசமித்ரன்!
அருமையான காட்சிகளை கண்முன்னே நிறுத்திட்டு நிஜத்தையும் பொட்டுன்னு போட்டு உடச்சீடீங்க!
நன்றிங்க Maddy வருகைக்கும் பகிர்தலுக்கும்!
Post a Comment