பரீட்சை நேரத்து மணியோசை
எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்
மரங்களுக்கடியில்
புத்தகக் குவியல்கள்
இலைகளை மேயும்
பட்டு புழுக்களாய்
பத்திகளை மேயும்
சுந்தரும் சாந்தியும்
எனக்கு நேற்று பார்த்த சினிமா
இப்பத்தான் ஞாபகம் வரணுமா
சாந்தீ இழுக்கிறேன்
நிமிரக் கூட இல்லை
இந்த பிள்ளை
எப்போவுமே இப்பிடித்தான்
யாரிடம் சொல்ல
நேற்றுப் பார்த்த கதையை
சுற்றிலும் பார்க்க
ஒரே பரபரப்பு
குட் மார்னிங் தாத்தா
வந்து விட்டிருக்கிறார்
குட் மார்னிங் தாத்தா
மிக பிரசித்தம் என் பள்ளியில்
அவர் வாக்கு அப்படியே பலிக்குமென
அவரை நெருக்கிக் கொண்டு
தாத்தா குட் மார்னிங்
குட் மார்னிங் தாத்தா
கூட்டத்தில் நானும் தான்
இன்னிக்கு அந்த சனியம் புடுச்ச
சமூக அறிவியல் பரீட்சை வேறயா
தாத்தா வாக்கு என்னவோ எனக்கு
அட சீக்கிரம் இங்க பாருய்யா
ஆ என்னத்தான் பாக்குறாரு
இப்போ சொல்லிருவாரு
நீ பெயிலாப் போயிருவ
அடச்சீ
இந்த கார்த்தி முன்னால
ஏன்யா சொன்ன
மனசுக்குள்ள சொல்லிகிட்டாலும்
சத்தமாத்தான் சொன்னேன்
இந்த வாக்கெல்லாம் நான் நம்பறதில்லப்பா
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
குழந்தைகளற்றது என் தெரு பஞ்சு மிட்டாய், பலூன் என எவன் தொல்லையுமில்லை அன்று கவிதை விற்க வந்தவனை வாசலோடு அனுப்பிவிட்டேன் பூக்காரியிடம் எனக்கென...
6 comments:
ரசித்தேன்.
நன்றிங்க மாதவராஜ், வருகைக்கும் கருத்துக்கும்!
நல்லா இருக்கு இனியா.
நன்றி லாவண்யா!
ஐ ... ஐ .. நல்ல இருக்கு சுகிர்தா
கண்ணன், நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!:)
Post a Comment