ஒரு அழகிய மலரிலிருந்து
சிதறிய கருத்த விதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
கணிசமாக சேர்ந்து
கனத்த மடியினை
பூவரச மர நிழலில்
அவிழ்த்துக் கொட்டி
இரு பங்காய்ப் பிரித்தபிறகு
ஒரு பங்கை
உறவுகளுக்கு நேர்ந்துகொண்டு
செழிக்கவென விதைத்தும்
மற்றொன்றை
பிரிவுகளுக்கென்றழைத்து
வீசியெறிந்தும் சென்றேன்
அன்றிரவு பெய்த மழை
அடித்துக்கொண்டு போனது
விதைத்தவைகளை
வீசி எறிந்தவைகளோ
விளைந்துகிடக்கிறது மனதடைத்து
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
11 comments:
பிரிவுகளுக்குமான நேசம்
மிக அபூர்வம். அது உங்களிடம்
காணக் கிடைப்பது அற்புதம்.
இன்றிரவு முழுவதும்
உங்கள் கவிதை
மழையெனப் பொழிந்து
கொண்டிருக்கும் என் மனதுக்குள்.
ஒரு விண்ணப்பம்:
முதல் பதிவுக்கும்,
அடுத்த பதிவுக்கும்
மிக நீண்ட இடைவெளி.
கொஞ்சம் குறைக்கலாமே?
உங்கள் விண்ணப்பத்திற்கும் கருத்துக்கும் நன்றிங்க சந்தானகிருஷ்ணன். இடைவெளியை குறைக்க கண்டிப்பா முயற்சிக்கிறேன் :)
இதுல என்ன பிரச்சனைன்னா எனக்கு எப்போதும் எழுதும் மனநிலை தொடர்ந்து இருக்கறதில்லை. நானும் காத்துட்டு இருக்கேன் இனி அது எப்போ வரும்ன்னு. என்ன இருந்தாலும் எழுத்து கொடுக்கும் திருப்தியே அலாதி தான் இல்லையா? :)
இனியா முத்திரை. :-)
நன்றி ஒளி :)
கவிதை ரொம்ப நல்லா இருக்கு சுகி. சில முறை பல முறை இப்படித்தான் வீசி எறிந்தததே எதிர்பாராமல் பயனளிக்கும். பெரும் தளத்திற்கு நகர்ந்து விட்டீர்கள் இனியா. வாழ்த்துகள்
நன்றி லாவண்யா!
//பெரும் தளத்திற்கு நகர்ந்து விட்டீர்கள் இனியா. வாழ்த்துகள்//
yes! fantastic!
பெரும்பாலும் இப்படித்தான் நடந்துவிடுகிறது :-)
நல்ல நடை
நன்றிங்க பா.ரா.!
நன்றிங்க உழவன்! :)
அருமை. இயற்கை வாரி கொடுக்கும். ஆனால் காத்திருக்கவேண்டும். வீசியெறிந்தால் தான் எந்த விளைச்சலும் விளையும். பொத்திப்பொத்தி பாதுகாத்தால் அது எதிர்பார்த்த விளைச்சலைத் தருவதில்லை. எதுவும் இயற்கையாகத்தான் முடிவு செய்யப்படவேண்டும். உங்களிடம் நல்ல கவிதைகயின் பொருண்மைகள் வார்த்தை சுத்தமாய் எதார்த்தமாய் மிளிர்கின்றன. தொடர்க. வாழ்த்துக்கள்.
நன்றிங்க ஹரணி :)
Post a Comment