Friday, November 13, 2009

துணிவே துணை!

நான் ஒரு பெண்
ஒரு தைரியமான பெண்
என நினைத்துக் கொண்டிருக்கிறேன்
பெண்கள் கூட்டத்திலெல்லாம்
பெண் விடுதலை பற்றி
பெண்கள் தனித்தன்மையோடு இருக்கணும்
துணிவோடு செயல் படணும்
என எழுச்சியுற பேசி இருக்கிறேன்
எத்தனையோ பேருக்கு
என் பேச்சு துணிவைக்
கொடுத்திருக்கிறது
நேற்று கடை வீதியில்
நானும் என் தோழியும்
எங்கள் தோழிக்கு
பிறந்த நாள் பரிசு ஒன்று வாங்க
கடைகளில் ஏறி இறங்கி
மும்முரமாய் தேடிக்கொண்டிருக்கையில்
பின் தொடரும் அதை கவனிக்கவில்லை
எவ்வளுவு நேரம் எங்களைத்
தொடர்ந்ததோ தெரியவில்லை
உகந்த பரிசு கிடைக்கவில்லை என
நாங்கள் இருவரும்
அவளுக்கு பிடித்தமானதாய்
ஒரு புத்தகம் வாங்கலாம்
என முடிவு செய்து
புத்தகக் கடை நோக்கி கீழிறங்கையில்
என் தோழி தான் முதலில் பார்த்தாள் அதை
பார்த்தவுடன் என்னிடம்
பதற்றமாய் கிளம்பலாம் என்றாள்
ஏன் வாங்கி செல்லலாம் என்றேன்
அப்புறம் சொல்கிறேன் என்றாள்
அவசரமாய் கீழிறங்கி
புத்தகக் கடைக்குள் நுழைந்தோம்
நுழைந்ததும் அவள்
நமக்கு பின்னால்
ஒன்று நம்மை தொடர்கிறது
இப்போது கூட கடைக்கு
முன்னால் தான் நிற்கிறது
நீ பார்த்தாயா என்றாள்
இல்லை என்றேன்
பான்டின் ஜிப்பை
திறந்து விட்டுக் கொண்டு
அலைந்து கொண்டிருக்கிறது என்றாள்
நான் கடையின் வாசலைப் பார்த்தேன்
நான் பார்த்ததும்
அதுவும் என்னை பார்த்து பல்லிளித்தது
எனக்கு நடுங்கத் தொடங்கியது
அது பட்டப் பகலில்
கடைகள் நிறைந்திருக்கும்
அந்த காம்ப்லக்சில்
அப்படித் தான் திரிந்து கொண்டிருக்கிறது
யாருமே பார்கவில்லையா
நான் கைபேசியை எடுத்து
எண்களை அழுத்தி காதில் வைத்து
யாரிடமோ பேசுவது போல்
பாவலா செய்ய
அது சடாரென மறைந்து விட்டது
எனக்குள் வெகு நேரம்
நடுக்கம் குறையவில்லை
ஏனோ அழுகை வந்தது
பெண்ணாய் இருப்பதை நினைத்து
என்னையே சமாதனம்
செய்து கொண்டேன்
பேசுவது சுலபம்
எதிர்கொள்வது கடினம்
இது தான் உலகம்
துணிவே துணை

3 comments:

உயிரோடை said...

துணிவோடே இருங்க‌ள் ப‌ய‌மில்லை.

Sugirtha said...

நிச்சயமா! நன்றி லாவண்யா!

Li. said...

....