உங்களைத்தான் கேக்குறேன்
இது நம்மளோட எத்தனாவது சந்திப்பு?
முதல் பத்துவரை கணக்குல வந்துச்சு
இப்போ கணக்கு வெச்சுக்கறதில்ல
உனக்குத் தெரியுமா?
ஹ்ம்ம் தெரியும்
ஆனா இப்போத் தெரியாது
என்ன சொல்ல வர
எனக்கு புரியல
உடனே கேட்டா தெரியாது
யோசிச்சா சொல்லிடுவேன்
சரி யோசிச்சே சொல்லு பாப்போம்
அதுக்கு நிறைய நேரம் பிடிக்குமே
பரவால்ல ரூமுக்கு போய்
உருப்படியா ஒண்ணும் பண்ணப் போறதில்ல
நீயே கொஞ்ச நேரம் காதைக் கடி
ஸ்ஸ் அடிப்பாவி நிஜமாவே கடிச்சிட்டே
நீங்க சொல்லி
எத செய்யாம விட்டிருக்கேன்
அது சரி
அந்த ஹோட்டலுக்கு போனது
முதல் முறை
ம்ம்ம்
அப்போ நீங்க எனக்கு
bourneville சாக்லேட் கொடுத்தீங்க
ம்ம்ம்
கோவிலுக்கு ரெண்டாவது முறை
ஹ்ம்ம்
..........
உங்க முன்னால் காதலி
பற்றி சொன்னபோது
ஐந்தாவது சந்திப்பு
........
பிரபஞ்சன் புத்தகம் கொடுத்தது
பத்தாவது சந்திப்பில்
.......
பலூன் வாங்கித் தர சொன்னேனே
அது பதினைந்தில்
.........
Chocopie வாங்கி கொடுத்தீங்களே
பதினெட்டாவது சந்திப்பில்
......
உங்க ரூம்ல
நூடில்ஸ் செய்து கொடுத்தது
இருபதாவது சந்திப்பில்
.......
பசுவய்யா கவிதை வாசித்தது
முப்பதாவது சந்திப்பில்
.........
போதும் போதும்
பரவால்லையே இத்தனை
நினைவில் வெச்சுருக்கே
ஆனாலும் Dairymilk கணக்குல வரலையே இன்னும்
சரி சரி முறைக்காத வா
உனக்கு லேட் ஆயிடுச்சு
அப்றோம் ஆன்டி திட்டும்
ஆட்டுக்குட்டி திட்டும்பே
Wednesday, July 28, 2010
Tuesday, July 13, 2010
அது
வெகு நேரமாய்
பார்த்தபடி இருக்கிறேன்
அது அமைதியாய் நிற்கிறது
உள்ளே செல்வார்
வெளியே வருவார்
எவருமின்றி தனியாய் நிற்கிறது
என்னையே பார்த்தபடி
அதன் பழுப்பு நிறக் கண்களிலிருந்து
புறப்பட்ட அந்த நிசப்தம்
என்னை ஊடுருவித் துளைக்கிறது
உரையாடல்கள் எதுவுமின்றி
மொழிகளுக்கப்பாற்பட்ட
ஒரு புரிதல் நிகழ்கிறது ஆங்கே
யாருமற்ற மைதானத்தில்
சுழலும் புழுதியிலேறி
போகிறோம் மேலே மேலே
அதன் ஒற்றைக் கர ஸ்பரிசம் தூண்டி
என்னில் கனிந்தவைகளை சுவைத்து
உப்பி பெருக்கிறது அது
முதலில் நான்
பிறகு அது
உச்சங்கள் தொட்டு விலகையில்
உத்திரத்திலிருந்து வழிகிறது
ஒரே சீராய் மங்கு வெயில்
பார்த்தபடி இருக்கிறேன்
அது அமைதியாய் நிற்கிறது
உள்ளே செல்வார்
வெளியே வருவார்
எவருமின்றி தனியாய் நிற்கிறது
என்னையே பார்த்தபடி
அதன் பழுப்பு நிறக் கண்களிலிருந்து
புறப்பட்ட அந்த நிசப்தம்
என்னை ஊடுருவித் துளைக்கிறது
உரையாடல்கள் எதுவுமின்றி
மொழிகளுக்கப்பாற்பட்ட
ஒரு புரிதல் நிகழ்கிறது ஆங்கே
யாருமற்ற மைதானத்தில்
சுழலும் புழுதியிலேறி
போகிறோம் மேலே மேலே
அதன் ஒற்றைக் கர ஸ்பரிசம் தூண்டி
என்னில் கனிந்தவைகளை சுவைத்து
உப்பி பெருக்கிறது அது
முதலில் நான்
பிறகு அது
உச்சங்கள் தொட்டு விலகையில்
உத்திரத்திலிருந்து வழிகிறது
ஒரே சீராய் மங்கு வெயில்
Monday, July 5, 2010
இயல்பு
மலர் வீழின்
இலகுவாய் சுமந்திருந்து
அமிழ்த்தும் பாரங்களை
மூழ்கடித்து வீழ்த்தி
அசூயைகள் ஒதுக்கி
பறவைகளின் எச்சங்கள் விழுங்கி
பழகியிராத வழிகளும்
பயங்களற்று பயணித்து
திசையறியா வனங்களிலும்
பாதைகள் அமைத்து
வளைந்து நெளிந்து
மேலேறி கீழிறங்கி
சலனமற்று பரவி
பரவசமாய் ஆர்பரித்து
என்னில் மகிழ்ந்திருந்தவனின்
தாகங்கள் தீர்த்து
முத்தமிட்டு கடந்து
விரைகிறேன் நெடுந்தூரம்
இலக்குகளற்று
பயணமே முதல் முடிவாய்
இலகுவாய் சுமந்திருந்து
அமிழ்த்தும் பாரங்களை
மூழ்கடித்து வீழ்த்தி
அசூயைகள் ஒதுக்கி
பறவைகளின் எச்சங்கள் விழுங்கி
பழகியிராத வழிகளும்
பயங்களற்று பயணித்து
திசையறியா வனங்களிலும்
பாதைகள் அமைத்து
வளைந்து நெளிந்து
மேலேறி கீழிறங்கி
சலனமற்று பரவி
பரவசமாய் ஆர்பரித்து
என்னில் மகிழ்ந்திருந்தவனின்
தாகங்கள் தீர்த்து
முத்தமிட்டு கடந்து
விரைகிறேன் நெடுந்தூரம்
இலக்குகளற்று
பயணமே முதல் முடிவாய்
Thursday, June 24, 2010
பாப்பா பாட்டு
அந்த புதிய கட்டிடம்
அழைத்துச் செல்லும் தெரு
வழியெல்லாம்
இறைந்து கிடக்கும் மணலில்
சின்னஞ்சிறு பாதங்கள்
சிவப்பு ரிப்பன் கட்டிய சிறுமி
அவள் மேலே
தாவி ஏறும் நாய்க்குட்டி
விளையாட்டு முடிவில்
நாய் வாலில் ஆடும் ரிப்பன்
என் கண்களில் வழியும் நீர்
அழண்டா சரியாயிரும் என
கண் துடைத்து தேற்றுகையில்
தாய் அவள் குழந்தை நான்
சிக்னலில் நிற்கும் வாகனங்கள்
என்னை எட்டிப் பார்க்கும் குழந்தை
மெல்ல கன்னம் கிள்ளையில்
அந்த ஜொள்ளில் வழியும் கவிதை
மாலை நேரப் பூங்கா
சாட் பூட் த்ரீ என
அந்த சந்தோசக் கூச்சலில்
மீள்கிறதென் பால்யம்
அழைத்துச் செல்லும் தெரு
வழியெல்லாம்
இறைந்து கிடக்கும் மணலில்
சின்னஞ்சிறு பாதங்கள்
சிவப்பு ரிப்பன் கட்டிய சிறுமி
அவள் மேலே
தாவி ஏறும் நாய்க்குட்டி
விளையாட்டு முடிவில்
நாய் வாலில் ஆடும் ரிப்பன்
என் கண்களில் வழியும் நீர்
அழண்டா சரியாயிரும் என
கண் துடைத்து தேற்றுகையில்
தாய் அவள் குழந்தை நான்
சிக்னலில் நிற்கும் வாகனங்கள்
என்னை எட்டிப் பார்க்கும் குழந்தை
மெல்ல கன்னம் கிள்ளையில்
அந்த ஜொள்ளில் வழியும் கவிதை
மாலை நேரப் பூங்கா
சாட் பூட் த்ரீ என
அந்த சந்தோசக் கூச்சலில்
மீள்கிறதென் பால்யம்
Wednesday, June 9, 2010
பாவண்ணன் சிறுகதை - அகநாழிகை ஜூன் இதழில்
பாவண்ணன் எழுதிய 'அடைக்கலம்' சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அவர் ஒவ்வொரு காட்சிகளையும், அது மனதுக்கு உள்ளே ஏற்படுத்தும் அலைகளையும் மிக அருமையாக விவரித்திருக்கிறார். படிக்க துவங்கியபோது ஒரு பாழான கோட்டையின் வரலாற்றைப் பற்றி தான் சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். எனக்கு வரலாறுகள் படிக்குமளவுக்கு பொறுமை இருந்ததில்லை. ஆனாலும் இந்த கோட்டை பற்றி அவர் சொல்லிய விதத்தில் என்னால் அந்த கோட்டையையும் நெல், கரும்பு, வாழை கிராமங்கள் எல்லாவற்றையும் அழகாய் கற்பனை செய்ய முடிந்தது. ஆவலில் தொடர்ந்து வாசித்தேன்.
கதையில் வரும் சொக்கலிங்கம் என்கிற மனிதர் அந்தக் கோட்டைக்கு உள்ளே நடக்க தொடங்கியதும் கதை திசை மாறுகிறது. அதற்கு பிறகு நான் கண்களில் நீரோடு தான் படித்தேன். சொக்கலிங்கம் ஒவ்வொரு அறைக்குள்ளும் போய் பார்க்கையில் முதலில் முகம் சுழித்து பிறகு சுரக்கும் அனுதாபத்தில் அசூயைகள் மறைந்து இரக்கம் மேலிடுவது எதார்த்தம். அவர் சந்திக்கும் அந்த சுவாரஷ்யமான இளைஞன் கதாபாத்திரம் அவனது பேச்சு வெகு எதார்த்தமாய் மிகுந்த தெளிவோடு இருக்கிறது. முடிவில் நிதர்சனம் வலித்தாலும் இந்த மாதிரி இளைஞர்கள் வாழ்கையை ஏதோ ஒரு மூலையில் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற ஒரு சின்ன ஆறுதலும் கிடைக்கிறது. இதை நிச்சயம் என்னால் ஒரு கதை என்று பார்க்க முடியவில்லை.
அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாய் யோசித்துப் பார்கிறேன். நிச்சயமாக சொக்கலிங்கம் மனது பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும். அவரோட குழந்தைகளுக்கு இது இன்னொரு பாடமாக இருந்திருக்கும்.
எழுதிய பாவண்ணனுக்கும், வெளியிட்ட அகநாழிகைக்கும் வாழ்த்துக்கள்.
கதையில் வரும் சொக்கலிங்கம் என்கிற மனிதர் அந்தக் கோட்டைக்கு உள்ளே நடக்க தொடங்கியதும் கதை திசை மாறுகிறது. அதற்கு பிறகு நான் கண்களில் நீரோடு தான் படித்தேன். சொக்கலிங்கம் ஒவ்வொரு அறைக்குள்ளும் போய் பார்க்கையில் முதலில் முகம் சுழித்து பிறகு சுரக்கும் அனுதாபத்தில் அசூயைகள் மறைந்து இரக்கம் மேலிடுவது எதார்த்தம். அவர் சந்திக்கும் அந்த சுவாரஷ்யமான இளைஞன் கதாபாத்திரம் அவனது பேச்சு வெகு எதார்த்தமாய் மிகுந்த தெளிவோடு இருக்கிறது. முடிவில் நிதர்சனம் வலித்தாலும் இந்த மாதிரி இளைஞர்கள் வாழ்கையை ஏதோ ஒரு மூலையில் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற ஒரு சின்ன ஆறுதலும் கிடைக்கிறது. இதை நிச்சயம் என்னால் ஒரு கதை என்று பார்க்க முடியவில்லை.
அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாய் யோசித்துப் பார்கிறேன். நிச்சயமாக சொக்கலிங்கம் மனது பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும். அவரோட குழந்தைகளுக்கு இது இன்னொரு பாடமாக இருந்திருக்கும்.
எழுதிய பாவண்ணனுக்கும், வெளியிட்ட அகநாழிகைக்கும் வாழ்த்துக்கள்.
Saturday, June 5, 2010
விழி(க்கு) எட்டா வானம்
நினைக்கவே கூடாதெனினும்
நம் காதலை எந்நாளும்
மறக்க முடிவதில்லை என்னால்
வெளிவராத நாள்பட்ட முள் ஒத்த
அந்த நினைவுகள் தடவுகையில்
வலிக்கிறது சுகமாய் உள்ளே
சர்க்கரை சீசாவினுள் நுழையும்
சிறு எறும்பின் ஆவலோடு
ரகசியப் பெட்டகம் திறந்து
உள்ளிறங்கி
எப்போதோ பதுக்கியிருந்த
புகைப்படம் எடுத்து
உன் நீலச் சட்டையின்
கட்டங்களுக்குள் புதைக்கிறேன்
யாருமறியாமல் என் முத்தங்களை
கலைந்து கிடக்கும்
நம் காதலின் மிச்சங்களை
கடந்து இன்னும் உள் செல்கையில்
தூசுபடிந்த வீணையிலிருந்து
நீயின்றி உயிரற்று
நீர்த்த கணங்கள் மீட்டிய
வார்த்தைகளற்ற இசை
வழிகிறது பெட்டகம் முழுக்க
என்றாவது வருவாய் என
காத்திருந்த நம்பிக்கைகள்
நசுங்கிக் கிடக்கிறது ஆங்காங்கே
அடி மனம் திறந்து கதறி
அவ்விடம் கடக்கையில்
கால்கள் தட்டி உருண்டோடுகிறது
நீ என்றோ பரிசளித்திருந்த
சுகந்தக் குப்பி
அதிலிருந்து கசிகிறது உன் மணம்
நம் காதலை எந்நாளும்
மறக்க முடிவதில்லை என்னால்
வெளிவராத நாள்பட்ட முள் ஒத்த
அந்த நினைவுகள் தடவுகையில்
வலிக்கிறது சுகமாய் உள்ளே
சர்க்கரை சீசாவினுள் நுழையும்
சிறு எறும்பின் ஆவலோடு
ரகசியப் பெட்டகம் திறந்து
உள்ளிறங்கி
எப்போதோ பதுக்கியிருந்த
புகைப்படம் எடுத்து
உன் நீலச் சட்டையின்
கட்டங்களுக்குள் புதைக்கிறேன்
யாருமறியாமல் என் முத்தங்களை
கலைந்து கிடக்கும்
நம் காதலின் மிச்சங்களை
கடந்து இன்னும் உள் செல்கையில்
தூசுபடிந்த வீணையிலிருந்து
நீயின்றி உயிரற்று
நீர்த்த கணங்கள் மீட்டிய
வார்த்தைகளற்ற இசை
வழிகிறது பெட்டகம் முழுக்க
என்றாவது வருவாய் என
காத்திருந்த நம்பிக்கைகள்
நசுங்கிக் கிடக்கிறது ஆங்காங்கே
அடி மனம் திறந்து கதறி
அவ்விடம் கடக்கையில்
கால்கள் தட்டி உருண்டோடுகிறது
நீ என்றோ பரிசளித்திருந்த
சுகந்தக் குப்பி
அதிலிருந்து கசிகிறது உன் மணம்
Wednesday, June 2, 2010
காற்றிலாடிய இலை
மொட்டை மாடியின் பக்கச் சுவர்களை
பற்றியபடி இருந்தது
அண்டை வீட்டு மரத்தின்
கீழிறங்கிய இரண்டு வாதுகள்
காற்றின் ஓருரசலில்
விழுந்தது அதனின்றொரு பழுத்த இலை
காற்றின் சிறு வருடலுக்கும்
சிணுங்கியபடி தள்ளித் தள்ளிப் போனதவ்விலை
சிணுங்களை ரசித்த காற்று துரத்த தொடங்கியது
தப்பிக்க அங்குமிங்கும் ஓடிக் களைத்த இலை
மாடிப்பரப்பின் சிற்சிறு குழிகளின் ஒன்றில்
தன் கூர்முனை குத்தி நின்றது இளைப்பாற
இலையையே சுற்றி சுற்றி வந்த காற்று
தன் தீராத காதலை சொல்ல
நின்றபடியே மெல்ல காற்றின் ஆளுமைக்கு
இசைந்து கொடுத்தது இலை உடல் அசைத்து
வெட்கத்தில் மேகங்கள் கருத்தது
மழை ஜோடனைக்கு கச்சிதமாய் காற்றசைந்தது
உடன் இலை பரந்தாடியது
இலையிட்காற்றும் காற்றிலிலையும்
மாறி மாறி ஆடியபடியே கடந்து போகையில்
ஒற்றை துளி விசிறி மீட்டெடுத்தது என்னை
உன் நினைவுகளிலிருந்து
பற்றியபடி இருந்தது
அண்டை வீட்டு மரத்தின்
கீழிறங்கிய இரண்டு வாதுகள்
காற்றின் ஓருரசலில்
விழுந்தது அதனின்றொரு பழுத்த இலை
காற்றின் சிறு வருடலுக்கும்
சிணுங்கியபடி தள்ளித் தள்ளிப் போனதவ்விலை
சிணுங்களை ரசித்த காற்று துரத்த தொடங்கியது
தப்பிக்க அங்குமிங்கும் ஓடிக் களைத்த இலை
மாடிப்பரப்பின் சிற்சிறு குழிகளின் ஒன்றில்
தன் கூர்முனை குத்தி நின்றது இளைப்பாற
இலையையே சுற்றி சுற்றி வந்த காற்று
தன் தீராத காதலை சொல்ல
நின்றபடியே மெல்ல காற்றின் ஆளுமைக்கு
இசைந்து கொடுத்தது இலை உடல் அசைத்து
வெட்கத்தில் மேகங்கள் கருத்தது
மழை ஜோடனைக்கு கச்சிதமாய் காற்றசைந்தது
உடன் இலை பரந்தாடியது
இலையிட்காற்றும் காற்றிலிலையும்
மாறி மாறி ஆடியபடியே கடந்து போகையில்
ஒற்றை துளி விசிறி மீட்டெடுத்தது என்னை
உன் நினைவுகளிலிருந்து
Subscribe to:
Posts (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...