பாவண்ணன் எழுதிய 'அடைக்கலம்' சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அவர் ஒவ்வொரு காட்சிகளையும், அது மனதுக்கு உள்ளே ஏற்படுத்தும் அலைகளையும் மிக அருமையாக விவரித்திருக்கிறார். படிக்க துவங்கியபோது ஒரு பாழான கோட்டையின் வரலாற்றைப் பற்றி தான் சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். எனக்கு வரலாறுகள் படிக்குமளவுக்கு பொறுமை இருந்ததில்லை. ஆனாலும் இந்த கோட்டை பற்றி அவர் சொல்லிய விதத்தில் என்னால் அந்த கோட்டையையும் நெல், கரும்பு, வாழை கிராமங்கள் எல்லாவற்றையும் அழகாய் கற்பனை செய்ய முடிந்தது. ஆவலில் தொடர்ந்து வாசித்தேன்.
கதையில் வரும் சொக்கலிங்கம் என்கிற மனிதர் அந்தக் கோட்டைக்கு உள்ளே நடக்க தொடங்கியதும் கதை திசை மாறுகிறது. அதற்கு பிறகு நான் கண்களில் நீரோடு தான் படித்தேன். சொக்கலிங்கம் ஒவ்வொரு அறைக்குள்ளும் போய் பார்க்கையில் முதலில் முகம் சுழித்து பிறகு சுரக்கும் அனுதாபத்தில் அசூயைகள் மறைந்து இரக்கம் மேலிடுவது எதார்த்தம். அவர் சந்திக்கும் அந்த சுவாரஷ்யமான இளைஞன் கதாபாத்திரம் அவனது பேச்சு வெகு எதார்த்தமாய் மிகுந்த தெளிவோடு இருக்கிறது. முடிவில் நிதர்சனம் வலித்தாலும் இந்த மாதிரி இளைஞர்கள் வாழ்கையை ஏதோ ஒரு மூலையில் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற ஒரு சின்ன ஆறுதலும் கிடைக்கிறது. இதை நிச்சயம் என்னால் ஒரு கதை என்று பார்க்க முடியவில்லை.
அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாய் யோசித்துப் பார்கிறேன். நிச்சயமாக சொக்கலிங்கம் மனது பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும். அவரோட குழந்தைகளுக்கு இது இன்னொரு பாடமாக இருந்திருக்கும்.
எழுதிய பாவண்ணனுக்கும், வெளியிட்ட அகநாழிகைக்கும் வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
2 comments:
கதையை வாசிக்கத் தூண்டும்
நல்ல பதிவுங்க.
நானும் படித்துவிட்டேன் சுகி. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
Post a Comment