வெகு நேரமாய்
பார்த்தபடி இருக்கிறேன்
அது அமைதியாய் நிற்கிறது
உள்ளே செல்வார்
வெளியே வருவார்
எவருமின்றி தனியாய் நிற்கிறது
என்னையே பார்த்தபடி
அதன் பழுப்பு நிறக் கண்களிலிருந்து
புறப்பட்ட அந்த நிசப்தம்
என்னை ஊடுருவித் துளைக்கிறது
உரையாடல்கள் எதுவுமின்றி
மொழிகளுக்கப்பாற்பட்ட
ஒரு புரிதல் நிகழ்கிறது ஆங்கே
யாருமற்ற மைதானத்தில்
சுழலும் புழுதியிலேறி
போகிறோம் மேலே மேலே
அதன் ஒற்றைக் கர ஸ்பரிசம் தூண்டி
என்னில் கனிந்தவைகளை சுவைத்து
உப்பி பெருக்கிறது அது
முதலில் நான்
பிறகு அது
உச்சங்கள் தொட்டு விலகையில்
உத்திரத்திலிருந்து வழிகிறது
ஒரே சீராய் மங்கு வெயில்
Tuesday, July 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை பன்னாடை பஞ்சு வைத்து அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில் பத்திரமாய் வைத்தாள் தங்கை இன...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
6 comments:
romba nalla irukku sugi
\\சுழலும் புழுதியிலேறி
போகிறோம் மேலே மேலே \\
superb
//உத்திரத்திலிருந்து வழிகிறது
ஒரே சீராய் மங்கு வெயில்//
அழகான வரிகள். மொழி தேறி வருது உங்களிடம்.
ஆரம்பத்தில் வேறு தளமாகவும் முடிவில் வேறு ஒன்றாகவும் வாசிக்க வைக்கிறது.
வாசிக்கையில்
பலவித அர்த்தங்களை
கொடுக்கிறது அது.
மிக நன்று.
நன்றி யாத்ரா! நன்றி லாவண்யா! நன்றி சந்தானகிருஷ்ணன்!
ரொம்ப நல்ல இருக்குங்க..
அழகா வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
நன்றி கமலேஷ்.
Post a Comment