இல்லாத ஒன்றை
இருக்கிறதாய் எண்ணி கொள்வதும்
இருக்கிற ஒன்றை
இல்லை எனக் கொள்வதும்
இதோர் வேடிக்கையான மனது
எனக்கு பிடித்த நானாய்
மற்றும் எல்லோருக்கும்
பிடித்த நானாய்
இருந்தே
அலுத்துப் போகிறது எனக்கு
தேகங்களை உரித்து போட்டு
அலையும் காற்றுக்குள்
அரவமற்று
உயிரை புகுத்தி கொள்ளும்
உத்தி கற்பிக்கப்படுமெனில்
ஆங்கே முதல் மாணவியாய் நான்
அளந்து அளந்து பேசியது போதும்
வெட்கத்தை அவிழ்த்து விட்டே கேட்கிறேன்
வானை கிழித்து வரும்
மின்னலென வந்து தான்
எடுத்து போய்விடேன்
உன்னோடு என்னை
இந்நோய் முற்றிவிட்டது போல
பார்
ஏதேதோ பிதற்றியபடியே இருக்கிறேன்
உன்னை சேரும்
ஓர் வழி புலப்படுமா என
6 comments:
இலக்கற்று விரிந்திருக்கிறது கவிதை இனியா.
//அலையும் காற்றுக்குள்
அரவமற்று
உயிரை புகுத்தி கொள்ளும்//
வித்தியாசமான சிந்தனை
நன்றிங்க உமாக்கா :)
//இலக்கற்று விரிந்திருக்கிறது கவிதை இனியா//
நானும் இனியா
நன்றிங்க கண்ணன்!
இனியா முத்திரை... இது உங்கள் கவிதை அல்ல... என் கவிதை... மனதில் இருந்து மையாய் மாறும் வழியில் தொலைந்த என் கவிதை...இன்னும் லட்சம் பேரின் கவிதை.. அருமை...
நன்றி ஒளி! கேக்க சந்தோசமா இருக்கு... :)
Post a Comment