மலர் வீழின்
இலகுவாய் சுமந்திருந்து
அமிழ்த்தும் பாரங்களை
மூழ்கடித்து வீழ்த்தி
அசூயைகள் ஒதுக்கி
பறவைகளின் எச்சங்கள் விழுங்கி
பழகியிராத வழிகளும்
பயங்களற்று பயணித்து
திசையறியா வனங்களிலும்
பாதைகள் அமைத்து
வளைந்து நெளிந்து
மேலேறி கீழிறங்கி
சலனமற்று பரவி
பரவசமாய் ஆர்பரித்து
என்னில் மகிழ்ந்திருந்தவனின்
தாகங்கள் தீர்த்து
முத்தமிட்டு கடந்து
விரைகிறேன் நெடுந்தூரம்
இலக்குகளற்று
பயணமே முதல் முடிவாய்
Monday, July 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
குழந்தைகளற்றது என் தெரு பஞ்சு மிட்டாய், பலூன் என எவன் தொல்லையுமில்லை அன்று கவிதை விற்க வந்தவனை வாசலோடு அனுப்பிவிட்டேன் பூக்காரியிடம் எனக்கென...
4 comments:
அம்மாடி நவீன கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா... ம்ம் மொழி நல்லா இருக்கு.
ரொம்ப நல்லா இருக்குங்க...அழகா எழுதி இருக்கீங்க..
:-) உங்கள் கவிதையின் அர்த்தம் புரிவது எனக்கு பிடித்த விளையாட்டு.. கொஞ்சம் கொஞ்சமாய் அடுத்த அடுத்த கடி நிலைகளுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.. நல்ல இருக்கு...
@உயிரோடை : செம்மொழியாச்சே !
நன்றிங்க லாவண்யா! :)
நன்றிங்க கமலேஷ்! உங்களோட கவிதைகள் இப்போதான் படிக்க துவங்கி இருக்கேன். அற்புதமா இருக்கு ஒவ்வொன்னும்.
அப்டியா ஒளி, வாழ்த்துக்களும் நன்றியும்! :)
Post a Comment