அந்த புதிய கட்டிடம்
அழைத்துச் செல்லும் தெரு
வழியெல்லாம்
இறைந்து கிடக்கும் மணலில்
சின்னஞ்சிறு பாதங்கள்
சிவப்பு ரிப்பன் கட்டிய சிறுமி
அவள் மேலே
தாவி ஏறும் நாய்க்குட்டி
விளையாட்டு முடிவில்
நாய் வாலில் ஆடும் ரிப்பன்
என் கண்களில் வழியும் நீர்
அழண்டா சரியாயிரும் என
கண் துடைத்து தேற்றுகையில்
தாய் அவள் குழந்தை நான்
சிக்னலில் நிற்கும் வாகனங்கள்
என்னை எட்டிப் பார்க்கும் குழந்தை
மெல்ல கன்னம் கிள்ளையில்
அந்த ஜொள்ளில் வழியும் கவிதை
மாலை நேரப் பூங்கா
சாட் பூட் த்ரீ என
அந்த சந்தோசக் கூச்சலில்
மீள்கிறதென் பால்யம்
10 comments:
:)
வெள்ளிக்கிழமை காலங்காற்தால இப்படி ஒரு கவிதை படித்தால் போதும் நாள் முழுக்க உற்சாகம் தான்.
நன்றி லாவண்யா,நன்றி யாத்ரா! :)
:-) அருமை. ( 'ஜொள்ளில்' - 'எச்சிலில்' என்று போட்டிருக்கலாம்னு தோணிச்சு...)
@ ஒளி - அப்படியா! நன்றி :)
ரொம்ப நல்லா இருக்குங்க...
இனிது இனிது கவிதை இனிது.
நன்றிங்க கமலேஷ்!
நன்றிங்க சந்தான கிருஷ்ணன்!
soooooooooo sweeeeeeeeeeet
நன்றி கௌரி... :))
Post a Comment