இப்போது தான் பார்கிறேன்
மேல் செல்லும் படிக்கட்டில்
ஒரே இரவில்
இத்தனை அழகாய்
இழைத்திருக்கிறது அந்த வலையை
எல்லாத்திசைகளையும் அடைத்து
அளந்து வைத்த நேர்த்தியுடன்
காற்றின் போக்குக்கு அசைந்து
ஆனாலும் கலையாது
எப்படி சாத்தியம்
இந்த அசாத்திய நுண்கலை
எழு சூரிய ஒளியில்
ஒவ்வொரு நூல் இழையும்
மினுக்கிறது பிசு பிசுப்பாய்
ஆர்வம் தொற்ற
ஆராய்கிறேன் மெல்ல
அதன் ஓரங்களெல்லாம்
மூலைக்கொன்றாய் நீள்கிறது
ஒரு நூல் பற்றி
நான் தடுமாறி மேலேற
நீண்டுகொண்டே இருக்கிறது
அந்த ஒற்றை நூல்
முடிவு தெரியாமல்
வலை முழுக்க
சுற்றி வருகிறேன்
நடுவில் அமர்ந்தபடியே
அமிழ்ந்த புன்னகையுடன்
அனைத்தையும் பார்கிறதந்த
கருஞ் சிலந்தி
Thursday, May 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
5 comments:
சிலந்தியும் அதன் பிரம்மாண்ட வலையும் பார்க்க பார்க்க பிரம்மிப்பூட்டுபவை. ரொம்ப நல்லா இருக்கு சுகி
சிலந்தி வலை ஒரு படிமம். கவிதை நல்லா இருக்கு சுகி
எப்புடிங்க? :-) ஒரு பரவ்யோட பார்வைல இருந்து மனுஷங்க வீடு...!
...சிலந்தி வலையோட அழகு அதில் இன்னும் சிறிது நேரத்தில் சிக்கிக் கொள்ள போகும் பூச்சியின் பார்வையிலிருந்து... !
உங்களுக்கு மட்டும் எப்டி இவ்ளோ அழகான கற்பனைகள் வருது... எனக்கு ஆச்சர்யத்துலையும் பொறாமைலயும் அழுகையே வருது... :-) வாழ்த்துக்கள்...
ஒளி,
ஒரு கவிதையை இத்தனை நுணுக்கமாய் ஆராயும்/அனுபவிக்கும் உங்கள் அணுகுமுறையை நான் வியக்கிறேன் - கூடவே அதை அழகாய் வெளிப்படுத்தும் உங்கள் ஆற்றலையும்!
எப்போதும் போல் இப்போதும் என்னை ஊக்குவிக்கும் உங்கள் வாழ்த்துக்கு நன்றி! :)
நன்றி லாவண்யா! :) நன்றி யாத்ரா! :)
Post a Comment