திருத்தி எழுதப்பட்ட
இப்புத்தகத்தில்
ஆதாமல்ல இந்த ஏவாளே
முதல் மனுஷி
தனியே இருந்த அவளை
சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை
துவாரம்தோரும் துளிர்த்து
கிளைத்தூர்ந்து துரத்த
ஏதேன் தோட்டத்தின்
வசந்தங்களை கொய்து
குழைத்து தீட்டிய ஓவியத்தில்
முளைத்த ஆதாம்
இப்போது ஏவாளில்
பருவங்களை விதைக்கிறான்
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
11 comments:
Nalla Padaippu Sugi. Nice words.
Nalla Padaippu Sugi!!!
"ஆதாமல்ல இந்த ஏவாளே
முதல் மனுஷி"
Nice pa
நன்றி சுமதி! முதல் வருகையும், கமெண்டும் சந்தோசமா இருக்கு :-)
என் அன்பு சுகிர்தா...
”சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை”
இப்படி ஒரு தனிமையை எப்படி சொல்லமுடிந்தது..excellent..
பின் வரும் வரிகளும் அருமை..
எல்லாப்பருவங்களையும் விதைக்கத்தான் வேனும்
தீராத்தனிமையை தொலைக்க
ஒரு வேண்டுகோள்..
எழுது சுகி...இன்னும்...
அன்பு ஸ்ரீ,
உன்னோட கமெண்ட் ரொம்ப சந்தோசமா இருக்கு.
எழுதறேன் பா :-)
சுகி ரொம்ப நாளை பிறகு வாசிக்கிறேன். கவிதை மொழியில் நல்ல மாற்றம். வாழ்த்துகள்
”சிசு தாங்கு சுவருதிர்ந்து
கசியும் அடர் உதிரமாய்
இடையற்ற வெறுமை”
அருமை..
நன்றி லாவண்யா! ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து எப்படி இருக்கீங்க?
நன்றி கௌரி...
பேக் வித் பேங்...
அட்டகாசம் சு. இன்னும் எழுதுங்க..
Murali - Thank you!
ம்ம் எழுதலாம்... :)
Post a Comment