ஒன்று
இரண்டு
மூன்று என
ஆயிரம் காரணங்கள் வரை இருக்கலாம் என்னிடம்
பறவைகள் கூடடைவதை
இரைச்சல்கள் என சபிக்கவும்
ஒற்றைப் பனித்துளி ஏந்திய
ரோஜாவை அலட்சியித்தொதுக்கவும்
சம்பங்கி பூவினை சுற்றியாடும்
தேன்சிட்டை வெறுக்கவும்
கண்டதும் காலை நக்கும்
நாய்க்குட்டியை அருவெருக்கவும்
கலகலப்புகள் நிறைந்திருக்கும் கூடத்தில்
தனிமைப்படுத்திக்கொள்ளவும்
வாழ்தலின் சுவாரசியங்களை
என்றைக்குமாய் மறுதலிக்கவும்
இவைகளற்ற இன்றோ
நீ இருந்தாய்
நீ மட்டுமே இருந்தாய்
9 comments:
அவைகள் இருந்தாலும் தெரியப்போவதில்லை
நீ அருகில் இருக்கும்பொழுது ...
கவிதை அருமை !
நன்றிங்க சுரேந்திரகுமார்...
மீண்டும் ஒரு காதல் கவிதை.
வழக்கம் போல் வசீகரம்.
நிறைய எழுதுங்கள்.
கவிதை நன்று
நன்றிங்க சந்தான கிருஷ்ணன் தொடர் வருகைக்கும், கருத்துக்கும்! முயற்சிக்கிறேன் :)
நன்றி லாவண்யா!!
//வாழ்தலின் சுவாரசியங்களை
என்றைக்குமாய் மறுதலிக்கவும்
இவைகளற்ற இன்றோ
நீ இருந்தாய்//
parattugal
polurdhayanithi
நன்றிங்க தயாநிதி முதல் வருகைக்கும், கருத்துக்கும்!
அருமை பாராட்டுக்கள்
நன்றி..
Post a Comment