கல்லறைத் தோட்டத்தினை
கடக்கும்
ஒவ்வொரு முறையும்
அத்தனை நேரம்
உடன் வந்த எண்ணங்கள்
உறைந்துவிடுகிறது
தின்றுகொண்டிருந்த பொழுதின்
சூனியத்தை கழிக்கவென
ஓர் நாள்
உள்செல்ல விழைந்தேன்
ஒரு ரோஜாவோடு?
கல்லறை படுக்கைகளின்
உள்ளே
உடல்கள் உறங்குவதாயும்
வெளியே
உயிர்கள் அலைவதாயும்
பார்க்கும் நிலைகேற்ப
காட்சிகள்
மாறி மாறி புலப்பட
ஒரு நேரம் நிலவும்
உறக்கத்தின் அமைதியில்
புழுங்கியது
பாழ் நினைவுகள்
உயிர்கள் எழுப்பும்
விதிர்க்கும் ஓலத்திலோ
எழும்பிடும் துர் எண்ணங்கள்
இறுகப் பற்றிக்கொண்ட
அவைகளுக்கு
என்னிரு கரங்களை
துண்டித்து ஈய
மறுத்த இரண்டுக்கும்
தேவைப் பட்டதென்னவோ
இதுவரை
நான் பற்றி இருந்த
ஒற்றை ரோஜா
Saturday, October 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
8 comments:
நல்லா இருக்கு இனியா. நீண்ட நாட்களுக்கு அப்பறம் இன்று தான் இணையம் வர இயன்றது. மற்ற பதிவெல்லாம் இனி தான் படிக்கனும்
மெதுவா படிங்க... நன்றி! :)
உங்கள் கவிதை வேறொரு
தளத்திற்கு இட்டுச் செல்கிறது.
எல்லோருக்கும் தேவை படத்தான் செய்கிறது ஒற்றை ரோஜா.
நிச்சயமாக! நன்றிங்க சந்தானகிருஷ்ணன்...
விரக்தி, வெறுமை , தனிமை - ஆகியவற்றை கேள்விக்குள்ளக்குகிறது சுகிர்தா ...
உண்மையில் நண்பர் சந்தன கிருஷ்ணன் சொன்னது சரியே.. வேறு தளத்தில் இருக்கிறது கவிதை
நன்றிங்க கண்ணன்...
கல்லறை தோட்டத்தில்தான் வாழ்கையின் முழு அர்த்தமும் புரிகிறது இல்லையா?
ம்ம் ஆமாங்க! வருகைக்கு நன்றி...
Post a Comment