Thursday, December 10, 2009

இன்றைக்கும் என்றைக்கும்

தொடுகையில் சிலிர்க்கிற
தொடர்கையில் துடிக்கிற
விரலூர்கையில் தகிக்கிற
வெட்கம் பொங்கி வழிகிற
மின்னும் கண்களைத் தவிர்க்கிற
மார்பினில் தலை கவிழ்க்கிற
காதோரம் கிசுகிசுக்கிற
ஆளுமையில் தவிக்கிற
விடுவிக்க கெஞ்சுகிற
புணர்கையில் சுகிக்கிற
முத்தங்களில் கரைகிற
முடிக்கையில் துவள்கிற
நித்தியப் பெண்மை

6 comments:

யாத்ரா said...

அருமையான கவிதை.

Sugirtha said...

நன்றி யாத்ரா!

Li. said...

:-) படித்து முடிப்பதற்குள் திகட்டியே விட்டது , அவ்வளவு கவிதை ....!

Sugirtha said...

அப்படியா... நன்றி!:)

உயிரோடை said...

கொஞ்ச‌ம் மொழி மாற‌ வேண்டும் என்று நினைக்கிறேன் சுகிர்தா

Sugirtha said...

நன்றி லாவண்யா!! நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்.