எதிர்பாரா நேரத்தில்
எதிர்பாரா இடத்தில்
பேசியின் ஆளுமைக்குள்
இருந்த நீ
கவனியாத அப்பொழுதில்
பருகக் கொடுத்தாய் உன்னை
மறக்க முடியாத
ஆச்சர்யப் பரிசாய் எனக்கு
ஒரு நீண்ட புன்னகையில்
என்னை பார்க்க செய்யும்
முயற்சியில்
உன் முகம் பார்த்தே
கடந்தன அச்சில வினாடிகள்
என்னை பார்த்தும் உணராமல்
பேசியின் மறுமுனையில்
இயங்கியதோ உன் மனது
மனதில் அடையாளமிட்டுக் கொண்ட
உன் வெளிர்நிற ஆடை
உறுதிபடுத்துமா
நான் பார்த்ததை
நிஜமென
உனக்கும் எனக்கும்
Thursday, April 29, 2010
Sunday, April 25, 2010
நீயில்லாத நானில்லை
அந்த மழை நாளின்
ஓர் இரவில்
நீர்சொட்டும் மரத்தடியில்
ஒருவரை ஒருவர்
மௌனித்து பார்த்திருந்தோம்
தாழ் கிளையின்
ஒரு இலை விளிம்பை பற்றி
மெதுவாய் வழுக்கி விழுந்தது
நம் காதல்
முத்தமிட ஓரிடம் தேடி
எல்லைகள் கடந்து
ஓடிக் களைத்து
ஓரிடம் நிற்கிறோம்
திரும்பிப் பார்க்கையில்
யாரும் துரத்தவில்லை
நம்மை தவிர
மறந்து விடலாம் என்று
தீர்மானித்த பிறகும்
எத்தனை முறை
அணைத்தாலும்
மறுபடி பற்றிக்கொள்ளும்
அந்த மாஜிக் மெழுகுவர்த்தியாய்
உன் நினைவுகள்
இம்முறை எறிகிறேன்
ஏழுகடல், ஏழுமலை தாண்டி
ஒரு நீழ்குகையின்
ஆழக் குளத்துள்
விழுந்ததும் உணர்கிறேன்
கரையில் பாதி நீ
நீரில் பாதி நான்
ஓர் இரவில்
நீர்சொட்டும் மரத்தடியில்
ஒருவரை ஒருவர்
மௌனித்து பார்த்திருந்தோம்
தாழ் கிளையின்
ஒரு இலை விளிம்பை பற்றி
மெதுவாய் வழுக்கி விழுந்தது
நம் காதல்
முத்தமிட ஓரிடம் தேடி
எல்லைகள் கடந்து
ஓடிக் களைத்து
ஓரிடம் நிற்கிறோம்
திரும்பிப் பார்க்கையில்
யாரும் துரத்தவில்லை
நம்மை தவிர
மறந்து விடலாம் என்று
தீர்மானித்த பிறகும்
எத்தனை முறை
அணைத்தாலும்
மறுபடி பற்றிக்கொள்ளும்
அந்த மாஜிக் மெழுகுவர்த்தியாய்
உன் நினைவுகள்
இம்முறை எறிகிறேன்
ஏழுகடல், ஏழுமலை தாண்டி
ஒரு நீழ்குகையின்
ஆழக் குளத்துள்
விழுந்ததும் உணர்கிறேன்
கரையில் பாதி நீ
நீரில் பாதி நான்
Saturday, March 6, 2010
தேநீர் வாடிக்கை
மணி அதிகாலை ஐந்தைத் தொட்டது. இன்றைக்கான என் பணி முடிந்தது. என் இருக்கையிலிருந்து சோம்பல் முறித்தபடி எழுந்தேன். சில வருடங்களாக இரவு வாழ்க்கை எனக்கு பழகி விட்டிருந்தது. அதன் தனிமையும் எனக்கென்று தன்னை முழுமையாய் கொடுக்கும் அதன் பரிவும் எனக்கு எப்போதுமே மிக பிடிக்கும். இப்படித் தான் இரவில் விழித்திருப்பவர்கள் எல்லாம் உணர்வார்கள் என நினைக்கிறேன். தனிமை பிடிப்பவர்களுக்கேன் இருட்டு பிடிக்கிறது. ஒரு வேளை அந்த நிசப்தத்தில் வழிகிற ஒரு வித சோகம் பிடிக்கிறதோ. இரவு விழித்திருக்கும் ஒவ்வொருவரையும் முழுமையாய் கவனிக்கிறது. பகல் முழுக்க பரவிக் கிடந்தவர்களை காட்டிலும் இரவில் விழித்திருந்து தன்னை உணர்பவர்களை நேசிக்கிறது என்றே தான் தோன்றுகிறது எனக்கு. சன்னல் வழி பார்க்கையில் தூரத் தெரியும் இருட்டு மெல்ல மெல்ல பக்கம் வருகிறது. அது நெருங்க நெருங்க என்னுள் அது என்னை ஆட்கொண்டுவிடும் என்ற ஒரு பயமும் என்னையே தொலைத்து விடுகிற ஒரு வித ஆர்வமும் ஒரு சேரவே எழுகிறது. முதலில் என்னை சுகிக்கும் இருட்டு பின் தன்னோடு அணைத்து எடுத்துப் போகிறது. நானும் ஒரு சில நிமிடங்களேனும் இருட்டோடு பயணித்து கரைந்து போகிறேன். எப்போது இருட்டை பார்த்தாலும் இந்த உணர்வே மேலிடுகிறது.
சுதாரித்து நடந்து என் இரு சக்கர வாகனத்தின் இருப்பிடம் வந்தேன். காலை நேரத்தின் சிறு பனி வண்டியின் மேல் ஈரமாய் படர்ந்திருந்தது. கைகளாலேயே வழித்தெடுக்க உள்ளங்கைகளில் இருந்து வழிந்தன சில துளிகள். பனி நீரின் ஸ்பரிஷம் ஒரு பெண்ணின் தொடுகையை போல் என்னுள் ஊடுருவி சென்றது. சாவியை எடுத்து வண்டியின் துவாரத்தில் பொருத்தி மேலேறி அமர்ந்து சற்றே பின்னுக்கு எடுத்தேன்.ஒரு சில முயற்சிக்கு பிறகே குளிரில் உறைந்து கிடந்த என்ஜின் தன்னை சூடு படுத்தி கொண்டு உறுமத் தொடங்கியது.உடல் பற்றிய சிறு குளிரும், லேசாய் கண்களுக்கு மறைந்து இன்னும் உதிர்ந்து கொண்டிருந்த பனியும் வண்டியை நகர்த்தியதும் காதில் ஏறிக் குடைந்தது. குளிர் நுழைந்ததும் உடல் சிலிர்த்தது. தோளை சற்று மேலேற்றிக் குறுக்கி காதை மறைத்துக் கொண்டே சற்று தூரம் சென்றேன். விடிந்தும் விடியாத இந்த நேரத்தில் எத்தனை எண்ணங்கள் தோன்றுகிறது. யாரும் பேசாத பொழுதுகளில் தான் மனம் ஓயாமல் பேசுகிறது. அதுவும் கூட்டுக் குடும்பத்தில் எல்லா வேலையையும் முடித்து கணவனை அடையும் மனைவியை போல தனக்கே தனக்கான பொழுதுக்காய் காத்திருக்கிறது.
இன்று என்பதை எப்போது உணரும் மனது. எப்போதும் நேற்றைய நினைவுகளோ நாளைய கவலைகளோ மனதை ஆக்ரமிக்கிறது. இப்பவும் கூட நேற்றைய ஓரிரு சம்பாஷனைகளும் நிகழ்வுகளுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்க்கையில் வருடத்தின் அத்தனை நாட்களும் ஒன்றும் புதியதாய் வாழ்வதில்லை நாம். அதில் முக்கால்பங்கு நாம் வாழ்ந்த நாட்களையே மறுபடி வாழ்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த நொடியை அனுபவிப்பது எப்படி. இப்போது நான் செய்யப் போவதை நான் நாளை நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. இந்த நிமிஷம் நான் வாழணும் அதுக்கு என்ன செய்யணும். யோசிக்கையில் கொஞ்சம் கஷ்டமான காரியம் போலதான் தோன்றியது. எங்கெல்லாமோ மனம் சென்றாலும் பழகி விட்டிருந்த வீதிகளும் இடங்களும் என்னை தாமே செலுத்தி எப்போதும் செல்லும் தேநீர்க் கடை வாசலில் நிறுத்தியது.
என்னை பழகிவிட்டிருந்த கடைக்காரருக்கு எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரிந்தது. ஒரு சிகரட்டை பிரித்தெடுத்து அதோடு வத்திபெட்டியும் சேர்த்து கடலை மிட்டாய் சீசாவின் மூடியின் மேல் வைக்கிறார். பிறகு ஒரு கிளாசில் எனக்கு தேநீரை ஆற்றுகிறார். என் நெடு நேர மௌனத்தை சிதைக்காத அவரின் புரிதலும் ஆற்றுகிற நேர்த்தியும் என்னை என்னிடமே விட்டுச் சென்றது. ஆற்றி விட்டு கொடுக்கிறார் ஒரு சிறு புன்னகையுடன். அதற்குள் பற்ற வைத்திருந்த சிகரெட்டை ஒரு கையிலும் தேநீரை மறு கையிலும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி வந்து சாலையை பார்த்து நின்றேன். தேநீரின் ஒவ்வொரு துளியும் ஒரு மேம்பட்ட சுவையோட குளிருக்கு இதமாய் உள் இறங்கியது. கொஞ்சம் தேநீர் பிறகு சிகரெட்டை ஆழ்ந்து உள்ளிழுத்தேன். அந்த அனுபவம் என் ஒவ்வொரு அணுவையும் நேசிக்கிற ஒரு மகத்தான ஒருத்தி என்னை இறுகப் பற்றி உதடுகளை முத்தமிட்டது போல் என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது. இழுக்கிற ஒவ்வொரு முறையும் முத்தங்கள்.அந்த நொடிகளை அந்த நொடிகளாகவே வாழ்ந்தேன்.
சுதாரித்து நடந்து என் இரு சக்கர வாகனத்தின் இருப்பிடம் வந்தேன். காலை நேரத்தின் சிறு பனி வண்டியின் மேல் ஈரமாய் படர்ந்திருந்தது. கைகளாலேயே வழித்தெடுக்க உள்ளங்கைகளில் இருந்து வழிந்தன சில துளிகள். பனி நீரின் ஸ்பரிஷம் ஒரு பெண்ணின் தொடுகையை போல் என்னுள் ஊடுருவி சென்றது. சாவியை எடுத்து வண்டியின் துவாரத்தில் பொருத்தி மேலேறி அமர்ந்து சற்றே பின்னுக்கு எடுத்தேன்.ஒரு சில முயற்சிக்கு பிறகே குளிரில் உறைந்து கிடந்த என்ஜின் தன்னை சூடு படுத்தி கொண்டு உறுமத் தொடங்கியது.உடல் பற்றிய சிறு குளிரும், லேசாய் கண்களுக்கு மறைந்து இன்னும் உதிர்ந்து கொண்டிருந்த பனியும் வண்டியை நகர்த்தியதும் காதில் ஏறிக் குடைந்தது. குளிர் நுழைந்ததும் உடல் சிலிர்த்தது. தோளை சற்று மேலேற்றிக் குறுக்கி காதை மறைத்துக் கொண்டே சற்று தூரம் சென்றேன். விடிந்தும் விடியாத இந்த நேரத்தில் எத்தனை எண்ணங்கள் தோன்றுகிறது. யாரும் பேசாத பொழுதுகளில் தான் மனம் ஓயாமல் பேசுகிறது. அதுவும் கூட்டுக் குடும்பத்தில் எல்லா வேலையையும் முடித்து கணவனை அடையும் மனைவியை போல தனக்கே தனக்கான பொழுதுக்காய் காத்திருக்கிறது.
இன்று என்பதை எப்போது உணரும் மனது. எப்போதும் நேற்றைய நினைவுகளோ நாளைய கவலைகளோ மனதை ஆக்ரமிக்கிறது. இப்பவும் கூட நேற்றைய ஓரிரு சம்பாஷனைகளும் நிகழ்வுகளுமே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்க்கையில் வருடத்தின் அத்தனை நாட்களும் ஒன்றும் புதியதாய் வாழ்வதில்லை நாம். அதில் முக்கால்பங்கு நாம் வாழ்ந்த நாட்களையே மறுபடி வாழ்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த நொடியை அனுபவிப்பது எப்படி. இப்போது நான் செய்யப் போவதை நான் நாளை நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. இந்த நிமிஷம் நான் வாழணும் அதுக்கு என்ன செய்யணும். யோசிக்கையில் கொஞ்சம் கஷ்டமான காரியம் போலதான் தோன்றியது. எங்கெல்லாமோ மனம் சென்றாலும் பழகி விட்டிருந்த வீதிகளும் இடங்களும் என்னை தாமே செலுத்தி எப்போதும் செல்லும் தேநீர்க் கடை வாசலில் நிறுத்தியது.
என்னை பழகிவிட்டிருந்த கடைக்காரருக்கு எனக்கு என்ன வேண்டும் என்றும் தெரிந்தது. ஒரு சிகரட்டை பிரித்தெடுத்து அதோடு வத்திபெட்டியும் சேர்த்து கடலை மிட்டாய் சீசாவின் மூடியின் மேல் வைக்கிறார். பிறகு ஒரு கிளாசில் எனக்கு தேநீரை ஆற்றுகிறார். என் நெடு நேர மௌனத்தை சிதைக்காத அவரின் புரிதலும் ஆற்றுகிற நேர்த்தியும் என்னை என்னிடமே விட்டுச் சென்றது. ஆற்றி விட்டு கொடுக்கிறார் ஒரு சிறு புன்னகையுடன். அதற்குள் பற்ற வைத்திருந்த சிகரெட்டை ஒரு கையிலும் தேநீரை மறு கையிலும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி வந்து சாலையை பார்த்து நின்றேன். தேநீரின் ஒவ்வொரு துளியும் ஒரு மேம்பட்ட சுவையோட குளிருக்கு இதமாய் உள் இறங்கியது. கொஞ்சம் தேநீர் பிறகு சிகரெட்டை ஆழ்ந்து உள்ளிழுத்தேன். அந்த அனுபவம் என் ஒவ்வொரு அணுவையும் நேசிக்கிற ஒரு மகத்தான ஒருத்தி என்னை இறுகப் பற்றி உதடுகளை முத்தமிட்டது போல் என்னை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தியது. இழுக்கிற ஒவ்வொரு முறையும் முத்தங்கள்.அந்த நொடிகளை அந்த நொடிகளாகவே வாழ்ந்தேன்.
Friday, March 5, 2010
வெட்க நிலாக்கள்
கீழ் மூக்கில்
எதையோ
இழுத்து இழுத்து
ரசித்து சுவைக்கும்
ஒரு கிளியின்
ஆர்வத்தோடு
உனைச் சுவைக்க
நான் நெருங்க
கூச்சலிடும்
கிளிக் குஞ்சுகளாய்
என்னை உன்னிடம்
நெருங்க விடாது
பின் இழுத்துக் கொள்கிறது
இந்த வெட்கம்
எத்தனை முயன்றும்
வெட்கம் தொலைத்து
வெளிவர முடியாத தவிப்பில்
உன்னை பார்க்கையில்
கண்களில் வழியும்
குறுஞ்சிரிப்போடு
நீயும் ஏதேதோ
செய்கிறாய்
கடைசி முயற்சியாய்
பல வண்ணக் குப்பிகளில்
என் வெட்கத்தை நிரப்பி
இறுக மூடி
கிளைக்கொன்றாய்
அதில் தோரணம் அமைக்கிறாய்
தொந்தரவுகளற்று
நிசப்தத்தின் இசைக்கு
இசைந்தபடி
நம்மை மறந்து
ஆழ்ந்து நேசிக்கையில்
உயிர்பெற்று பிரகாசிக்கும்
வெட்க நிலாக்கள்
பூரண வெளிச்சத்தில்
கொஞ்சும் கிளிகள்
எதையோ
இழுத்து இழுத்து
ரசித்து சுவைக்கும்
ஒரு கிளியின்
ஆர்வத்தோடு
உனைச் சுவைக்க
நான் நெருங்க
கூச்சலிடும்
கிளிக் குஞ்சுகளாய்
என்னை உன்னிடம்
நெருங்க விடாது
பின் இழுத்துக் கொள்கிறது
இந்த வெட்கம்
எத்தனை முயன்றும்
வெட்கம் தொலைத்து
வெளிவர முடியாத தவிப்பில்
உன்னை பார்க்கையில்
கண்களில் வழியும்
குறுஞ்சிரிப்போடு
நீயும் ஏதேதோ
செய்கிறாய்
கடைசி முயற்சியாய்
பல வண்ணக் குப்பிகளில்
என் வெட்கத்தை நிரப்பி
இறுக மூடி
கிளைக்கொன்றாய்
அதில் தோரணம் அமைக்கிறாய்
தொந்தரவுகளற்று
நிசப்தத்தின் இசைக்கு
இசைந்தபடி
நம்மை மறந்து
ஆழ்ந்து நேசிக்கையில்
உயிர்பெற்று பிரகாசிக்கும்
வெட்க நிலாக்கள்
பூரண வெளிச்சத்தில்
கொஞ்சும் கிளிகள்
Sunday, February 28, 2010
என் ஆழ்மன காதலை
வருவதற்கு முன்னே
வந்து நிற்கிறேன்
வந்ததும்
கட்டி அணைக்கிறாய்
பார்காத பொழுதில்
பக்கத்தில் வருகிறேன்
பார்க்காதது போல்
பார்த்து விடுகிறாய்
தொடும் தூரம்
நெருங்கி நிற்கிறேன்
தொடாதும்
தொட்டு விடுகிறாய்
ரகசிய மொழியில்
பேசிக் கொள்கிறேன்
மௌனமாய் அதை
ஆமோதிக்கிறாய்
பார்க்கிறாய்
தொடுகிறாய்
அணைக்கிறாய்
ரசிக்கிறாய்
வந்து நிற்கிறேன்
வந்ததும்
கட்டி அணைக்கிறாய்
பார்காத பொழுதில்
பக்கத்தில் வருகிறேன்
பார்க்காதது போல்
பார்த்து விடுகிறாய்
தொடும் தூரம்
நெருங்கி நிற்கிறேன்
தொடாதும்
தொட்டு விடுகிறாய்
ரகசிய மொழியில்
பேசிக் கொள்கிறேன்
மௌனமாய் அதை
ஆமோதிக்கிறாய்
பார்க்கிறாய்
தொடுகிறாய்
அணைக்கிறாய்
ரசிக்கிறாய்
Wednesday, February 24, 2010
நினைவுகள் நிறைகுகை
நான் அறியா ஏதோ ஒரு மிக நெருக்கமான புள்ளியில் உன்னை நீ என்னோடு இணைத்திருக்கிறாய். எத்தனை முறை நான் அதைக் கண்டறிய முயன்றபோதும் எனக்கு புலப்பட்டதே இல்லை அந்தப் புள்ளி. இனியும் புலப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அது எனக்கு தன்னை அன்றாடம் நினைவு படுத்த தவறுவதில்லை. அந்த புள்ளியிலிருந்து வெளிப்படும் நினைவின் கதிர்கள் என்னை அவ்வப்போது முடக்கி விடுகிறது. பிறகு நான் இயங்க திறனின்றி, நினைவுகள் நிறைந்த குகைக்குள் விழுகிறேன்.
எவ்வழி விழுகிறேன் என்பதோ, எப்படி வெளியேறுவது என்றோ எதுவும் தெரியாமல் குகைக்குள் கேட்கும் நினைவின் குரல் ஒலிக்கும் திசை நோக்கி நடக்கிறேன். அது என்னை உள்ளே உள்ளே இழுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நினைவின் சித்திரமும் அதன் பக்கச் சுவர்களில் வரையபட்டிருப்பது எனக்கு மிகத் தெளிவாய் தெரிகிறது. அந்த சித்திரங்களைப் பார்க்கும் போது அதை சார்ந்த இன்ன பிற நினைவுகள் என்னை வந்தடைகிறது. ஒரு காட்டாற்றின் வேகத்தோடு நினைவுகள் என்னை அடித்து செல்கிறது. அதன் முடிவில் எங்கோ விட்டு செல்கிறது. நான் தொடர்ந்து நடக்கிறேன் இன்னொரு சித்திரம், இன்னொரு பயணம். பிறகு ஒருவழியாய் என்னையறியாமலே எப்படியோ வெளிவருகிறேன்.
நான் வெளிவந்த பிறகும் நான் அறியா ஒரு கணத்தில் என்னில் அந்த புள்ளியை இயக்க என்னைத் தொடர்கிறது. நான் தப்பி செல்ல எடுக்கும் என் எத்தனை பிரயத்தனங்களும் பலனளித்தபாடில்லை. மாறாக என்னை அல்லாது ஒருவரும் போகாத அதன் தனிமையில் நான் கரைகிறேன். விட்டு செல்ல மனமின்றி அதன் கதைகளையும் கேவல்களையும் நான் தொடர்ந்து கேட்கிறேன். அது என்னுள் அந்த புள்ளியை மறுபடி இயக்குகிறது. நான் மறுபடி விழுகிறேன். பின் என்னை தொடரும் நம் நினைவுகள்.
எவ்வழி விழுகிறேன் என்பதோ, எப்படி வெளியேறுவது என்றோ எதுவும் தெரியாமல் குகைக்குள் கேட்கும் நினைவின் குரல் ஒலிக்கும் திசை நோக்கி நடக்கிறேன். அது என்னை உள்ளே உள்ளே இழுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நினைவின் சித்திரமும் அதன் பக்கச் சுவர்களில் வரையபட்டிருப்பது எனக்கு மிகத் தெளிவாய் தெரிகிறது. அந்த சித்திரங்களைப் பார்க்கும் போது அதை சார்ந்த இன்ன பிற நினைவுகள் என்னை வந்தடைகிறது. ஒரு காட்டாற்றின் வேகத்தோடு நினைவுகள் என்னை அடித்து செல்கிறது. அதன் முடிவில் எங்கோ விட்டு செல்கிறது. நான் தொடர்ந்து நடக்கிறேன் இன்னொரு சித்திரம், இன்னொரு பயணம். பிறகு ஒருவழியாய் என்னையறியாமலே எப்படியோ வெளிவருகிறேன்.
நான் வெளிவந்த பிறகும் நான் அறியா ஒரு கணத்தில் என்னில் அந்த புள்ளியை இயக்க என்னைத் தொடர்கிறது. நான் தப்பி செல்ல எடுக்கும் என் எத்தனை பிரயத்தனங்களும் பலனளித்தபாடில்லை. மாறாக என்னை அல்லாது ஒருவரும் போகாத அதன் தனிமையில் நான் கரைகிறேன். விட்டு செல்ல மனமின்றி அதன் கதைகளையும் கேவல்களையும் நான் தொடர்ந்து கேட்கிறேன். அது என்னுள் அந்த புள்ளியை மறுபடி இயக்குகிறது. நான் மறுபடி விழுகிறேன். பின் என்னை தொடரும் நம் நினைவுகள்.
Friday, February 19, 2010
எனக்கு அறிமுகமான நான்
எழுதுவதற்கான மன நிலையிலிருந்து சில நாட்களாய் விலகியிருந்த என்னை எழுத வைத்த லாவண்யாவுக்கு நன்றி ! :)
அந்த நாட்களை யோசிக்கும்போது என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதை எழுதறேன். அப்போது தான் என்னை நானே புரிந்து கொள்ள தொடங்கினேன்னு நினைக்கறேன்.அதில் முக்கால் பங்கு நான் பெண்கள் பள்ளி/கல்லூரி விடுதியில் தான் கழித்தேன். வீட்டிலிருந்த போதெல்லாம் நான் நிறைய பேசியதாக நினைவில்லை. இப்போதும் கூட நான் அப்படித் தான். என் நண்பர்களிடம் பேசும் அளவுக்கு வீட்டில் யாரிடமும் பேசியதில்லை. ஆனால் விடுதியில் நான் நிறைய குறும்பு (அ) சேட்டைகள் பண்ணி இருக்கிறேன். ஆனாலும் அப்பா பயம் எனக்கு அப்போது அதிகம் ஆதலால் எந்த சேட்டையும் முன்னால் நின்று பண்ணியதில்லை.
எனக்கு பிடிக்காத நாட்கள் ன்னா அது பரீட்சைக்கு முன்னாடி படிக்கறதுக்கு விடுமுறை விடுவாங்களே அதான். அப்போ எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியாது. பரீட்சைக்கு முந்தய நாளை தவிர மற்ற நாட்களில் படிப்பது பிடிக்காது. அதனாலே வம்புக்கிழுக்க யாராச்சு கிடைச்சாங்கன்னா எனக்கு கொண்டாட்டம் தான். ஆனா ஓரளவுக்குதான் வம்புக்கிளுப்பேன் நம்புங்க.
நான் படித்த பெண்கள் கல்லூரி விடுதியில் எங்களுக்கு எந்த கடிதம் வந்தாலும் அதை வார்டன் படிச்சுட்டுதான் கொடுப்பாங்க. அப்போ ஏப்ரல் 1 க்காக ஒரு அறைத் தோழிய ஏமாத்த ஏற்கனவே வந்த ஒரு கடிதத்தின் மேலுறையை எடுத்து அதற்குள் நாங்கள் எழுதிய ஒரு காதல் கடிதத்தை வைத்து கொடுத்துவிட்டு இதை படிச்சுட்டு மேம் உன்னை வந்து பார்க்க சொன்னாங்கன்னு சொல்லிட்டு போய் ஒளிஞ்சு நின்னு அவளோட உணர்வுகளை நோட்டம் விட்டோம். அவள்முகம் மாறியவுடன் தற்செயலா போறமாதிரி என்னாச்சு என்னாச்சு ன்னு கேட்டு போனோம்.அவள் எனக்கு இது யாருன்னே தெரியல எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொன்னாள். பெருந்தன்மையா சரி வா நானும் வரேன் போய் பேசலாம் இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லேன்னு சொல்லி, அவளை கூட்டிட்டு மேம் ரூம் முன்னாடி போனதும் இந்த நாடகத்தை முடிச்சு கூட்டிட்டு வரலாம்ன்னு கூட்டிட்டு போனேன். ஆனா ரூம் பக்கத்துல போனதும் மேம் வெளிய வந்துட்டாங்க. அவங்களை பார்த்து ஒரு புன்னகைய உதிர்துட்டு, அங்க பக்கத்துல இருந்த தண்ணி குடிக்க வந்த மாதிரி பாவலா பண்ணிட்டு, அவள எதுவும் பேச விடாம அவளுக்கு விளக்கி கூட்டிட்டு வரதுக்குள்ள எனக்கு தான் வேர்த்துருச்சு.
அப்றோம் இன்னொரு ஞாபகம், அப்போ எல்லாம் எனக்கு ஆங்கிலத்துல அவ்வளவு ஞானம் கிடையாது. இப்போ கொஞ்சம் பரவால்லன்னு நினைக்கறேன். அப்போ என்னையும் மதிச்சு என்னோட தோழி தமிழ் செல்வி அக்கா அவங்க சித்தி சித்தப்பா க்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத என் உதவிய நாடினாங்க. எனக்கு இப்போதும் சித்தி சித்தப்பாவை ஆன்டி, அங்கிள் ன்னு கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அம்மா அப்பாவுக்கு இணையாக நான் அவர்களை மதிப்பதால் எனக்கு ஆன்டி, அங்கிள் என்பது அன்னியமாகப் படும். அதனால அப்போ தமிழுக்கு சொன்னேன் 'Step Mother, Step Father' ன்னு எழுத சொல்லி அவங்களும் எழுதினாங்க. பிறகு அந்த வார விடுமுறைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து என்ன துறத்தி துறத்தி அடிச்சாங்க. எனக்கு என் தப்பு புரிந்தாலும் என்னால் ஏனோ சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவங்கள் கோபம் இன்னும் அதிகம் தான் ஆச்சு. அதை இப்போ நினைச்சாலும் எனக்கு சிரிப்பு தான் வருது :))
முதல் முறை அந்த மாதிரி ஜோக் ஒன்று ஸ்ரீதேவி சொன்னாள், சவிதா எனக்கு சொன்ன அவள் ரகசிய காதல், பதிலுக்கு நான் அவளிடம் பகிர்ந்து கொண்ட என் ரகசிய காதல்.
அப்றோம் நாவல்கள் படிக்கத் தொடங்கினேன், முதல் கவிதை மாதிரி ஏதோ எழுதினேன்.
கிரிக்கட் பைத்தியமா இருந்தேன். நிறைய சிரித்திருக்கிறேன். நிறைய விளையாடி இருக்கிறேன்.
அம்மா அருகாமைக்காக ஏங்கி இருக்கிறேன் பல நாட்கள்,சமயங்களில் அனாதை போல உணர்ந்திருக்கிறேன்,தனிமை பழகியிருக்கிறேன்,போர்வைக்குள் புதைந்து நிறைய அழுதிருக்கிறேன்.
இந்த மாதிரி நிறைய இருக்குங்க. இப்போதைக்கு இது போதுமா? :)
அந்த நாட்களை யோசிக்கும்போது என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதை எழுதறேன். அப்போது தான் என்னை நானே புரிந்து கொள்ள தொடங்கினேன்னு நினைக்கறேன்.அதில் முக்கால் பங்கு நான் பெண்கள் பள்ளி/கல்லூரி விடுதியில் தான் கழித்தேன். வீட்டிலிருந்த போதெல்லாம் நான் நிறைய பேசியதாக நினைவில்லை. இப்போதும் கூட நான் அப்படித் தான். என் நண்பர்களிடம் பேசும் அளவுக்கு வீட்டில் யாரிடமும் பேசியதில்லை. ஆனால் விடுதியில் நான் நிறைய குறும்பு (அ) சேட்டைகள் பண்ணி இருக்கிறேன். ஆனாலும் அப்பா பயம் எனக்கு அப்போது அதிகம் ஆதலால் எந்த சேட்டையும் முன்னால் நின்று பண்ணியதில்லை.
எனக்கு பிடிக்காத நாட்கள் ன்னா அது பரீட்சைக்கு முன்னாடி படிக்கறதுக்கு விடுமுறை விடுவாங்களே அதான். அப்போ எனக்கு என்ன பண்ணறதுன்னே தெரியாது. பரீட்சைக்கு முந்தய நாளை தவிர மற்ற நாட்களில் படிப்பது பிடிக்காது. அதனாலே வம்புக்கிழுக்க யாராச்சு கிடைச்சாங்கன்னா எனக்கு கொண்டாட்டம் தான். ஆனா ஓரளவுக்குதான் வம்புக்கிளுப்பேன் நம்புங்க.
நான் படித்த பெண்கள் கல்லூரி விடுதியில் எங்களுக்கு எந்த கடிதம் வந்தாலும் அதை வார்டன் படிச்சுட்டுதான் கொடுப்பாங்க. அப்போ ஏப்ரல் 1 க்காக ஒரு அறைத் தோழிய ஏமாத்த ஏற்கனவே வந்த ஒரு கடிதத்தின் மேலுறையை எடுத்து அதற்குள் நாங்கள் எழுதிய ஒரு காதல் கடிதத்தை வைத்து கொடுத்துவிட்டு இதை படிச்சுட்டு மேம் உன்னை வந்து பார்க்க சொன்னாங்கன்னு சொல்லிட்டு போய் ஒளிஞ்சு நின்னு அவளோட உணர்வுகளை நோட்டம் விட்டோம். அவள்முகம் மாறியவுடன் தற்செயலா போறமாதிரி என்னாச்சு என்னாச்சு ன்னு கேட்டு போனோம்.அவள் எனக்கு இது யாருன்னே தெரியல எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொன்னாள். பெருந்தன்மையா சரி வா நானும் வரேன் போய் பேசலாம் இதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லேன்னு சொல்லி, அவளை கூட்டிட்டு மேம் ரூம் முன்னாடி போனதும் இந்த நாடகத்தை முடிச்சு கூட்டிட்டு வரலாம்ன்னு கூட்டிட்டு போனேன். ஆனா ரூம் பக்கத்துல போனதும் மேம் வெளிய வந்துட்டாங்க. அவங்களை பார்த்து ஒரு புன்னகைய உதிர்துட்டு, அங்க பக்கத்துல இருந்த தண்ணி குடிக்க வந்த மாதிரி பாவலா பண்ணிட்டு, அவள எதுவும் பேச விடாம அவளுக்கு விளக்கி கூட்டிட்டு வரதுக்குள்ள எனக்கு தான் வேர்த்துருச்சு.
அப்றோம் இன்னொரு ஞாபகம், அப்போ எல்லாம் எனக்கு ஆங்கிலத்துல அவ்வளவு ஞானம் கிடையாது. இப்போ கொஞ்சம் பரவால்லன்னு நினைக்கறேன். அப்போ என்னையும் மதிச்சு என்னோட தோழி தமிழ் செல்வி அக்கா அவங்க சித்தி சித்தப்பா க்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத என் உதவிய நாடினாங்க. எனக்கு இப்போதும் சித்தி சித்தப்பாவை ஆன்டி, அங்கிள் ன்னு கூப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அம்மா அப்பாவுக்கு இணையாக நான் அவர்களை மதிப்பதால் எனக்கு ஆன்டி, அங்கிள் என்பது அன்னியமாகப் படும். அதனால அப்போ தமிழுக்கு சொன்னேன் 'Step Mother, Step Father' ன்னு எழுத சொல்லி அவங்களும் எழுதினாங்க. பிறகு அந்த வார விடுமுறைக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்து என்ன துறத்தி துறத்தி அடிச்சாங்க. எனக்கு என் தப்பு புரிந்தாலும் என்னால் ஏனோ சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவங்கள் கோபம் இன்னும் அதிகம் தான் ஆச்சு. அதை இப்போ நினைச்சாலும் எனக்கு சிரிப்பு தான் வருது :))
முதல் முறை அந்த மாதிரி ஜோக் ஒன்று ஸ்ரீதேவி சொன்னாள், சவிதா எனக்கு சொன்ன அவள் ரகசிய காதல், பதிலுக்கு நான் அவளிடம் பகிர்ந்து கொண்ட என் ரகசிய காதல்.
அப்றோம் நாவல்கள் படிக்கத் தொடங்கினேன், முதல் கவிதை மாதிரி ஏதோ எழுதினேன்.
கிரிக்கட் பைத்தியமா இருந்தேன். நிறைய சிரித்திருக்கிறேன். நிறைய விளையாடி இருக்கிறேன்.
அம்மா அருகாமைக்காக ஏங்கி இருக்கிறேன் பல நாட்கள்,சமயங்களில் அனாதை போல உணர்ந்திருக்கிறேன்,தனிமை பழகியிருக்கிறேன்,போர்வைக்குள் புதைந்து நிறைய அழுதிருக்கிறேன்.
இந்த மாதிரி நிறைய இருக்குங்க. இப்போதைக்கு இது போதுமா? :)
Subscribe to:
Posts (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்...
-
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...